அலுவல்களை முடித்துக் கொண்டு சத்யனின்அறைக்கு சென்றான்.
"சத்யன் என் மீது கோபமாக இருக்கிறாயா?"
அவன் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தான். அவன் பார்வை வாசல் பக்கம் இருக்க…
"கெட் அவுட்னு சொல்றியா? நான் என்ன சொல்றேனா.." ரஞ்சன் முடிக்கும் முன்,
"அத்தான்… " என்று கத்தியபடி தனு அவன் முன் வந்து நின்றாள்.
"என்னை எதுக்கு வர சொன்னீங்க… ம்… மனுகுட்டி இல்லையா… பார்க்காமல் கண்ணே பூத்து போச்சு.."
"உனக்கு மனு என்றால் மிகவும் பிடிக்கும்… அப்படித்தானே... "
"ஆஹாங்… இதுல சந்தேகம் வேறயா .."
"சந்தேகம் இல்லை… உன்னை நம்பறேன். அதனால்…"
"அதனால.."
"உன்னை கல்யாணம் செய்துக்கலாம்னு இருக்கேன்"
"வாவ்… சூப்பர் அத்தான்… இதை நான் எதிர்பார்க்கலை" தனு துள்ளி குதித்தாள்..ரஞ்சன் அதிர்ந்தான். வாட்…!
"பட் ஒன் திங்… உனக்கு மனுகுட்டியை ரொம்ப பிடிக்கும். அவளை நீ நல்லபடியா பார்த்துக்குவேன்னுதான் இதை செய்யறேன். மத்தபடி என்னுடைய மனைவியா உன்னை நினைக்க மாட்டேன். இதுக்கு சம்மதம்னால் கல்யாணம் செய்துப்போம்"
"அது…"
"யோசிச்சுகூட நாளைக்கு சொல்லு. "
'யோசிக்கனும்தான்… ஆனால் நாளைக்கு அத்தானோட மனசு மாறிப்போய் கல்யாணம் செய்துக்க மாட்டேனு சொன்னால் சிக்கலாயிடும்.' என்று எண்ணிய தனு படக்கென்று சொன்னாள்.
"நீங்க சொல்றதுக்கு எனக்கு சம்மதம் அத்தான். உங்களால் மீரா அக்காவை மறக்க முடியாதுனு எனக்கு தெரியும். நான் மனுகுட்டிக்காக இந்த சாக்ரிஃபைஸ் பண்ணுவேன்.. ஆனால் அம்மாகிட்ட…"
"க்ளியரா சொல்லனும் என்றால்… இது ஒரே கண்டிஷன்தான்… மற்றபடி என்னுடைய சொத்தில்… சம்பாதியத்தில் சட்டபடி உனக்கு உரிமை உண்டு."
"ஓ… அம்மா சம்மதிச்சால்..."
"நானே பேசறேன்… ஊருக்கு போயிட்டு வந்து பேசறேன். நீ கிளம்பு" என்றான்.
"ஏதாவது காபி ஷாப் போகலாம்னு நினைச்சேன்." தனு தயங்கினாள்.
"சாரி… இப்ப எனக்கு டைம் இல்லை. அடுத்த முறை கண்டிப்பா கூட்டிட்டு போறேன்." தனுவை