"என்ன?"
"நான் என் மாமன்கிட்ட குடியை நிறுத்தினாதான் அடுத்த பேச்சுனு சொல்லிட்டேன். அது குடியை நிறுத்தற ஆஸ்பத்திரிக்கு போறேனு சொல்லிடுச்சு."
"ஏன்… உன் மாமனைதான் கல்யாணம் செய்துக்கனுமா?"
"அப்படி இல்லை ரேச்சல்.. என் மாமனை எனக்கு ஓரளவுக்கு தெரியும். தெரியாத மோசமானவன்ட்ட மாட்டிட கூடாதில்ல. அது எதுனா பண்ணுச்சுனா ஊர் பஞ்சாயத்துல நியாயம் கேட்டுவேன்."
"ஓ… ஊர்காரங்க சப்போர்ட் வேணும்."
"இந்த மாதிரி கிராமத்துல வாழனும்னால் அது ரொம்ப முக்கியம்ப்பா. அப்புறம் . அந்த கார்மேகத்துகிட்ட நான் மாமனைதான் கல்யாணம் செய்துக்குவேன்னு ஸ்ரிக்டா சொல்லிட்டேன்."
"அவன் என்ன சொன்னான்?"
"அதுனால என்னங்கறான்… பேச்சே சரியில்ல ரேச்சல். எனக்கு கடன் மட்டும் இல்லைனா சாப்பாடு வியாபாரத்துக்கே போக மாட்டேன். அவன் கண்ணுல படவே பிடிக்கலை"
"நீ எதுக்கும ஜாக்கிரதையாக இரு. நான் கிளம்பறேன்" என்று சொல்லி திரும்பி வந்து வண்டியில் ஏறினாள். வண்டியை ஸ்டார்ட் செய்யும்போது சட்டென நினைவு வந்தது போல திரும்பி…
"கல்பி… எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் கிட்ட சொல்லி உனக்கு வேற நல்ல வேலை வாங்கி தரட்டா" என்று கத்தினாள். அவள் அருகே ஓடி வந்து கல்பி,
"நிஜமாவா… ரொம்ப சந்தோஷமா இருக்கு." என்றாள்
"இன்னிக்கு சாயங்காலம் எங்க வீட்டிற்கு வா" என்று சொல்லி கிளம்பினாள்.
"சத்யன் சார்கிட்ட வேலை கேட்க போறியா டேச்சல்?"
"ப்ச்… அந்த ஆள்ட்ட இல்லடா… ரஞ்சன் அண்ணாட்ட கேட்பேன்."
"அந்த ஆளா… திரும்பவும் சண்டை போட்டுட்டியா?"
"அவன்தான் சண்டை போட்டான். அப்புறம் சாரி கேட்டு வந்தான்.நமக்கு ஒத்து வராதுனு நான்தான் வந்துட்டேன். நீயும் அவங்கிட்ட பேசக்கூடாது."
"உனக்கு பிடிக்கலைனா பேச மாட்டேன்க்கா"
"சரி… வா நாம நம்ம மரத்துல உட்கார்ந்து ஸ்வீட் சாப்பிடலாம்" அவள் மரத்தை நோக்கி விரைந்தாள்.
ஜெமிக்கு ஒரு விஷயம் உறுதியாக தெரிந்தது. ரஞ்சனுக்கும் ரேச்சல் சத்யன் இணைப்பு