தந்தையின் நிலை அறியவே விரும்பினாள்.... ஆட்டம் முடிந்தபின் மற்றவர்கள் வருகிறார்களா, இல்லையா என்றுகூட பார்க்கவில்லை... அவள் பாட்டுக்கு மடமடவென்று பெவிலியன் நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டாள்.... துளசிதான் முன்னே சென்று அவள் கையை பிடித்து நிறுத்தியது...
“மைத்திக்கா ஏன் இப்படி பண்ற... என்னாச்சு உனக்கு....”, என்று உலுக்க, கண்ணீருடன் அவளைத் திரும்பி பார்த்தாள் துளசி... மற்றவர் இவர்கள் அருகில் வருவதை பார்த்த துளசி அவசர அவசரமாக மைத்தியின் கண்களைத் துடைத்து அவளின் வேகத்தை கட்டுப்படுத்தி தன்னுடன் மெதுவாக அழைத்து சென்றாள்... மற்றவர்கள் மைத்தியின் மீது அதிருப்தியில் இருந்ததால் அவளை கண்டுகொள்ளவில்லை...
பத்து ஓவர்களில் இருபத்துநான்கு ரன்கள் கொடுத்தது என்பது மிகச்சிறந்த பந்து வீச்சே... ஆனால் இங்கே மைத்தியின் கடைசி ஓவரால் வெற்றி பெற வேண்டிய போட்டியை தோற்றதால் அனைவருமே அவளின் மீது அதிருப்தியில் இருந்தனர்... அனைவரும் மற்ற ஆட்டக்காரர்கள் இருக்கும் இடத்தை அணுக அவர்களின் பயிற்சியாளர் இப்பொழுது எதையும் பேச வேண்டாம் , எல்லாவற்றையும் அறைக்கு சென்று பார்த்துக் கொள்ளலாம் என்று கூற அனைவரும் பரிசளிக்கும் நேரத்திற்காக காத்திருக்க தொடங்கினார்கள்.... மைத்திக்குதான் தணல் மேல் நிற்பது போலவே இருந்தது... எப்பொழுது அறைக்கு சென்று வீட்டிற்கு அழைக்க என்ற நினைப்பிலேயே நின்றாள்.....
இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தாலும் அபாரமாக பந்து வீசி ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியதற்காக மைத்திக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது.... ஏற்கனவே இவள் மீது காண்டில் இருக்கும் சிலருக்கு அது இன்னும் வெறியை ஏற்றியது...
வர்ணனையாளர் விருது வழங்கியபின் மைத்தியிடம் கேள்வி கேட்க அதற்கு ஒரு வரியில் பதிலளித்தாள் மைத்தி... அவளின் பதில்கள் சிறு விருப்பமின்மையை காட்ட அவரும் தன் கேள்விக்கணைகளை நிறுத்தி அடுத்த பரிசை அறிவிக்க ஆரம்பித்தார்...
தென்னிந்திய, வடஇந்திய பாகுபாடென்பது மற்ற துறைகளைப் போல விளையாட்டுத் துறையிலும் உண்டு.... இன்னும் சொல்லப்போனால் மற்ற துறைகளைவிட இங்கு அதிகம் என்றே சொல்லலாம்...
தென்னிந்தியாவில் இருந்து ஒருவர் விளையாடுவதே அரிதெனும் போது இந்த முறை நால்வர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்... அதுவும் தமிழகத்தில் இருந்து இருவர் .... இது போதாதா மற்றவர்களின் காழ்ப்புணர்ச்சிகளைத் தூண்ட....
அதுவும் முதலில் இவர்கள் இருவரை தேர்ந்தெடுப்பதை தடுத்து பேசியவர் தற்பொழுது இவர்களுக்கு பயிற்சியாளராக இருப்பவரே.... போதிய அனுபவம் இல்லை என்ற காரணம்