ஆரம்பித்தாள்... பயிற்சியாளர் சற்று அதிருப்தியுடனே அடுத்த வீராங்கனையை அழைத்தார்...
மறுநாள் காலையிலேயே போட்டி நடைபெற இருப்பதால் மதியம் வரையே பயிற்சி மேற்கொண்டனர்... மதிய உணவின் பின் அனைவரையும் சென்று ஓய்வெடுக்க பயிற்சியாளர் சொல்ல தங்கள் அறையை நோக்கி சென்றனர்...
“என்னாச்சு மைத்திக்கா... நீ சரியாவே பால் போடலன்னு அந்த டெல்லி கேப்டன் சொல்லிட்டு இருந்தாங்க.... கோச் வேற உன்னை திட்டினாராமே....”
“ப்ச் நான் வந்தே இருக்கக் கூடாது துளசி.... மனசெல்லாம் அப்பாக்கு நாளைக்கு என்ன சொல்லுவாளோன்னு அதுலயே இருக்கு... இதுல எங்க இருந்து கான்சென்ட்ட்ரேட் பண்ணி பால் போட....”
“அக்கா நான்தான் அங்கிள்க்கு எல்லாம் சரியாகிடும்ன்னு சொன்னேனே.... நீ ஏன் அதையே நினைச்சு கவலைப்படற...”
“நீ என்ன சொன்னாலும் என் மனசு கேக்கலை துளசி... ஆத்துல இருக்கறவாளோடையும் மூணு நாளைக்கு ஒரு வாட்டிதான் பேச முடியும்ன்னு சொல்லிட்டா... நாளைக்கு என்ன சொல்லப் போறாளோன்னு தெரிஞ்சுக்க முடியாதேன்னு இருக்கு....”
“மைத்திக்கா கொஞ்ச நேரம் எல்லாத்தையும் மறந்துட்டு உனக்கு பிடிச்ச கடவுளை வேண்டிக்கோ... அங்கிள்க்கு பெரிய அளவுல எதுவும் இருக்க கூடாதுன்னு நானும் வேண்டிக்கறேன்... அவர் எல்லாம் பார்த்துப்பாரு... நீ மனசை ரிலாக்ஸ் பண்ணிக்கோ... இன்னைக்கு ஒழுங்கா டென்ஷன் இல்லாம இருந்தாதான் நாளைக்கு நல்லபடியா மேட்ச் விளையாட முடியும்....”
“இன்னைக்கு ராத்திரி ஒரு வாட்டி பேசிட்டேன்னா ஓரளவு சரியாகிடுவேன் துளசி...”
“நாம வேணா கோச் கிட்ட விஷயத்தை சொல்லி ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கி வீட்டுக்கு பேச முடியுதான்னு பார்க்கலாம்...”, துளசி கூற மைத்தியும் தன் தந்தைக்கு நல்ல முறையில் அறுவை சிகிச்சை முடியவேண்டும் என்று கடவுளை வேண்ட ஆரம்பித்தாள் .....
அன்றைய இரவு, (இந்தியாவில் அதிகாலை) தங்கள் பயிற்சியாளரிடம் சிறப்பு அனுமதி பெற்று தங்கள் இல்லத்திற்கு அழைத்து பேச, அவர்களும் அன்று காலை பதினோரு மணிக்கு பிறகே எதுவும் தெரியும் என்று கூற, தந்தையின் நிலை பற்றி அறியாமல் வருந்தியபடியே இருவரும் படுக்க சென்றனர்...
மறுநாள் காலை எழுந்தவுடன் மைத்தி தங்கள் பயிற்சியாளரை சந்தித்து தன் தந்தையின் நிலையறிய தொலைபேசியில் அழைக்க அனுமதிக்க கேட்க, போட்டிக்கு முன் பேச