கூறியே இருவரையும் நிராகரித்தார்... ரஞ்சியில் இருவரும் ஆடிய விளையாட்டை காரணம் காட்டியே பாஸ்கரும், தமிழ் நாட்டு பயிற்சியாளரும் இருவருக்கும் வாய்ப்பு வாங்க போராடினர்...
அறைக்கு சென்றவுடன் பயிற்சியாளர் அனைவரையும் வந்து அமர சொன்னார்... முதலில் அன்றைய போட்டியில் நல்ல முறையில் மட்டையடித்தவர்களை பாராட்டி பேசியவர் துளசியை தனிப்பட்ட முறையில் அழைத்து பாராட்டினார்... துளசிதான் இருப்பதிலேயே இளைய வீராங்கனை.... இருந்தபோதும் அவளின் மட்டையடிக்கும் திறன் அபாரமாக இருந்ததால் பயிற்சியாளரின் பிரத்யேக பாராட்டு கிடைத்தது.... ஆட்ட நாயகி விருதுக்கு துளசிக்கும், மைத்திக்கும் இடையே மிகச் சிறிய இடைவெளியே... ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியதால் மைத்திக்கு அந்த விருது சென்றது...
அதன் பின்னர் பயிற்சியாளரின் கவனம் பந்து வீசுபவர்கள் பக்கம் சென்றது.... எதனால் வெற்றி பெற வேண்டிய போட்டி தோல்வியைத் தழுவியது என்று அங்கிருந்தவர்களை பார்த்து அவர் கேட்க, மைத்தி யாருக்கு வந்த விருந்தோ என்று தனி உலகில் இருந்தாள்.... மற்றவர் பேசுவது ஒன்றும் அவள் காதுகளை எட்டவில்லை.....
ஒவ்வொருவரும் கடைசி ஓவரால்தான் தோல்வி ஏற்பட்டது என்பது போலே பேச பயிற்சியாளர் என்ன பதில் சொல்லப் போகிறாய் என்று மைத்தியை பார்த்தார்... அவளோ தன் சிந்தனையிலேயே இருந்தாள்... துளசி இரண்டு முறை சைகை செய்த பின்னும் அவளின் சிந்தனை மறையவில்லை...
பயிற்சியாளர் சற்று அழுத்தி சத்தமாக கேள்வி கேட்க அப்பொழுதும் மைத்தி அதே நிலையிலேயே இருந்தாள்... அவளுக்கு அனைவரும் எப்பொழுது செல்வார்கள், தான் சென்று பயிற்சியாளரிடம் பேசலாம் என்றே இருந்தது...
மைத்தியின் அருகில் அமர்ந்திருந்த பெண் அவளை உலுக்க சற்று தன் சிந்தையிலிருந்து வெளி வந்தாள் மைத்தி.... ‘என்ன..’ என்பதுபோல் தன் அருகிலிருந்த பெண்ணை பார்க்க அவர் பயிற்சியாளர் கேட்டதை மைத்திக்கு கூறினாள்...
மைத்திக்கு ஒன்றும் புரியாத நிலை... அவள் வீசிய பத்தாம் ஓவரின் முதல் பந்துடனே அவளின் ஆட்டம் முடிந்தது... அதன் பின் கைகள் மட்டுமே பந்து வீச சிந்தை முழுதும் தந்தையே... அதனால் அவளிற்கு என்ன நடந்ததென்று நினைவில்லை... இதில் எதனால் தோல்வி என்றால் என்ன கூறுவாள்... அவர்கள் அணி தோற்றதே இன்னும் அவள் சிந்தையை அடையவில்லை...
நிறைய ஆட்டங்கள் ஆடி வயது முதிர்ந்த பக்குவப்பட்ட ஆட்டக்காரர்களுக்கே இந்த மாதிரி நிலையை கடப்பது கடினம்.... மைத்தி சிறு பெண்.... அப்பொழுதுதான் தன் அழகான குடும்ப