பாதுகாப்பாக எப்படியாவது மீட்டெடுக்க வேண்டும். அவனது நிஜ முகத்தை அவனுக்கு உணர்த்த வேண்டும் என்று நினைத்தவள் ஆசிர்வாதம் தாத்தாவை நோக்கி சென்றாள்.
நடந்த எல்லாவற்றையும் ஒன்றும்விடாமல் தாத்தாவிடம் கூறினாள். ரத்த சம்பந்தம் இருந்தால் தான் உறவா.... இல்லையே.. ஆத்மார்த்தமாக மனதளவில் உண்மையாக நேசித்தால் அங்கே உண்மை உறவு மலரத் தொடங்கி விடுகிறது. அது போலவே அவர்கள் இருவருக்குள்ளும் தாத்தா பேத்தி என்ற உணர்வும் தோன்றியிருக்க கண்ணீரோடு குயிலியை அணைத்துக் கொண்டு உச்சி முகர்ந்து முத்தமிட்டார்.
அம்மாடி குயிலி... இறைவன் தான் உன்னை காப்பாற்றியிருக்கிறார். எப்போதும் அவர் உன் கூட இருப்பார். நீ கவலைப்படாதே... உன் மாமா பையனுக்கு ஒன்றும் ஆகாது. அவனும் உண்மை அறிந்து உன்னை தேடி வருவான் என்று சொல்ல ஆமா தாத்தா... அவனுக்கு உண்மை தெரிய வேண்டும். அதற்காக நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும் .
சொல்லுமா...என்ன உதவி செய்யவேண்டும். நான் செய்கிறேன்.
தாத்தா... இதில்தான் மொத்த வரலாறும் இருக்கிறது. அதனால் நீங்கள் இதைக் கொண்டுபோய் ராகவ் இடம் கொடுக்க வேண்டும். ப்ளீஸ்... ஆனால் தாத்தா நீங்கள் கவனமாக செயல்பட வேண்டும். இதில் ஆபத்து அதிகம் என்று சொல்ல சரிமா நான் கண்டிப்பாக போகிறேன். நீ எனக்கு பேத்தி என்றால் அவனும் எனக்கு பேரன் தான். நிச்சயமாக நான் இதை பாதுகாப்பாக அவனிடம் கொண்டு சேர்க்கிறேன். ஆனால் என்னுடன் வராமல் நீ எங்கே செல்லப்போகிறாய் என்றார் தாத்தா.
இதை பாருங்கள் என்று தன் கையில் இருந்த மற்றொரு குறிப்பு தாளை அவரிடம் நீட்ட அதை வாங்கி பார்த்தார் ஆசீர்வாதம் தாத்தா.
குயிலி... இது குறிப்புதாள் இல்லைமா... நீ சின்ன வயதில் படித்த பாடப்புத்தகத்தின் ஒரு பேப்பர். சிங்கம் புலி கரடி வரையாடு படம் எல்லாம் இருக்கிறது என்றார் ஆசிர்வாதம்.
தாத்தா நான் படித்த புத்தகத்தின் பேப்பராக இருக்கலாம். ஆனால் நான் அடுத்ததாக இங்கே தான் போக வேண்டும் என்று சொல்ல அவரும் அந்த பேப்பரை முன்னும் பின்னுமாக திருப்பி நன்றாக பார்த்தார்.
அம்மாடி குயிலி... முப்பத்து ஆறு மார்க் போட்டு இருக்காங்க... நீ தான் நல்லா படிக்கிற புள்ளை ஆச்சே என்றார் தாத்தா.
இப்போ விளக்கம் சொல்ல நேரமில்லை. சீக்கிரமாக இதை சாப்பிட்டு விட்டு கிளம்புவோம் என்று சொல்ல சரி என்றவாறு இருவரும் சாப்பிட்டுவிட்டு பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடந்தனர்.
அம்மா டீ... நாம தேடி வந்தது கிடைச்சிட்டுல.. அப்புறம் எங்க போற..