இல்லைனு யாரு கிட்டயும் பேசாம விளையாடாம எப்பவும் தனியா இருந்துச்சாம். அப்போ அந்த பொண்ணுக்கு ஒரு பொம்மை கெடைச்சுதாம். அந்த பொண்ணு அந்த பொம்மையோட சந்தோசமா விளையாடுச்சாம். அந்த பொண்ணை பார்த்த அந்த பொம்மைக்கு அது ரொம்ப பாவமா இருக்குனு தோணுச்சாம். அதனால அந்த பொம்மை வேற யார்கூடவும் விளையாடாம அந்த பொண்ணுகிட்ட மட்டும் விளையாடுச்சாம். அந்த பொண்ணுக்கு எல்லாமே அந்த பொம்மை தான். ஆனா திடிர்னு அந்த பொம்மையை அவங்க வீட்ல இருக்கறவங்க இன்னொரு பொண்ணுக்கு கொடுத்துட்டாங்களாம். இப்போ அந்த பொண்ணு என்னாகும் அசோக்???" கல்லூரி வந்திருக்க, அவனின் முகத்தை நோக்கி திரும்பி நின்றபடி கேட்டாள் நித்யா.
அவளின் கதையை உணர்ந்திருந்தவன், "அது பொம்மையில்லை நித்யா" என, "ஆனா நான் அந்த பொண்ணு அசோக்..." என்றவள், ஒரு புன்னகையுடன் "பை..." என கல்லூரியை நோக்கி செல்ல, செல்லும் அவளையே யோசனையுடன் பார்த்தபடி நின்றான் அசோக், எப்படி இதை ராமிடம் சொல்வது என.
தொடரும்
Next episode will be published on 21st Nov. This series is updated weekly on Saturday mornings.