பசங்க மாதிரி ரொம்ப கியூட்டா அழகா" என மீண்டும் கீர்த்தி சிரிக்க, அவளின் தோளில் ஒரு அடிவைத்த தமிழ், "ராஸ்கல் ஒரு டைரக்டர் அபப்டிங்கற மரியாதை கூட இல்லாம என்னையே கிண்டல் பண்றியா?" என முறைக்க, "ஐயோ சாரி மேடம் மறந்துட்டேன்" என பயந்ததை போல கீர்த்தி கடிக்க, அவளின் காதை பிடித்து திருகினாள் தமிழ்.
கீர்த்தியுடன் சிரித்தபடி ராமின் அறையை கடந்து சென்ற தமிழ் ஒர பார்வையால் அவனின் அறையை பார்க்க, அந்த நொடிப்பொழுதில் அதை கண்டு கொண்டான் ராம். அவன் கண்டு கொக்ண்டதை உணர்ந்த தமிழ், சட்டென பார்வையை அந்த புறமாக மாற்றியவள் கீர்த்தியையும் இழுத்து கொண்டு வேகமாக அங்கிருந்து நகர ராமின் முகத்தில் மந்தகாசபுன்னகை தோன்றியது.
பஸ்ஸில் இருந்து இறங்கிய நித்யா யோசனையுடன் கல்லூரியை நோக்கி நடந்து கொண்டிருக்க, அவளை உரசியபடி வந்து நின்றது ஒரு கார். கார் நின்றதை உணர்ந்து பயந்து இரண்டடி பின்னால் நகர்ந்து நின்றவள் காரில் இருந்து இறங்கிய அசோக்கை கண்டதும் அவனை முறைத்தாள்.
"அசோக்...நீங்க தானா? நான் பயந்தே போய்ட்டேன். இப்படியா பயப்படுத்தறது?" அவள் அவனை முறைத்தபடி கேட்க, "இப்படி ரோட்ல கனவு கண்டுட்டே நடந்தா அப்பறம் பயப்படத்தான் செய்யணும்?" என்றபடி அவளுடன் இனைந்து நடந்தான்.
"என்ன நடந்து போயிட்டு இருக்க?" அசோக் கேட்க, "சும்மா பஸ்ல வரலாமேன்னு வந்தேன். அதான் காலேஜ்க்கு நடந்து போயிட்டு இருக்கேன்" நித்யா சொல்ல, "பஸ்லயா ...நீயா? நம்ப முடியலையே" அசோக் ஆச்சர்யமாக கேட்க, "ஹ்ம்ம் மனசு சரி இல்லை. அதன் புதுசா ஏதாவது ட்ரை பண்ணுனா கான்செண்ட்ரேஷன் அதுல போகும்னு நெனைச்சேன்" என்றவளை பார்த்தான் அசோக்.
"என்னாச்சு? எனி ப்ரோப்லேம்?" என்றவனை கண்டு சிரித்தவள் எதுவும் பேசாமல் நடக்க, "என்னனு சொன்னா என்னால முடிஞ்சா ஹெல்ப் நானும் பண்ணுவேன்" அசோக் சொல்லவும், ஒரு பெருமூச்சு கிளம்பியது நித்யாவிடம் இருந்து.
"உங்களால எனக்கு ஹெல்ப் பண்ண முடியாது. இது என் பிரெச்சனை நான் தான் பார்த்துக்கணும்" நித்யாவின் பதிலில் அவளை ஒரு முறை கூர்ந்து பார்த்தவன் "ஹ்ம்ம்... இருக்கலாம். ஆனா என்னால எதுவும் ஹெல்ப் பண்ண முடியலைனாலும் என்கிட்டே ஷேர் பண்ணிக்கிட்டா உனக்கு கொஞ்சம் பாரம் குறையும். உன் மைண்ட் அதுக்கு அப்பறம் கொஞ்சம் ஈஸியா யோசிக்கலாம் இல்லையா?" அசோக் சொல்லவும் சில நிமிடம்ங்கள் அமைதியாக நடந்தவள், "ஒரு கதை சொல்லட்டா??? ஒரு சின்ன பொண்ணு சின்ன பார்க்க அழகா