அல்லவா" என்று சைத்ரன் கேலி பேசினான்.
"நீ என்னை பேச விடு அவனுக்கு நாம்தான் பார்த்து திருமணம் செய்து வைக்க கூடாது என்று சொன்னேன். அவனாக யாராவது ஒரு பெண்ணை விரும்பி திருமணம் செய்துகொண்டால் இந்த தோஷம் அடிபட்டுவிடும் என்று அந்த ஜோசியர் சொன்னார்."
"ஐயையோ இந்த சிடுமூஞ்சி போலீஸ் ஆபீஸர் ஒரு பொண்ண பார்த்து விரும்பி கல்யாணம் பண்ணி முடிக்கிறதுக்குள்ள எனக்கு வயசு ஆகி விடுமே" என்று சைத்ரன் அலுத்துக்கொள்ள,
" இப்போதுதான் யாரோ திருமணத் திட்டத்தில் இருந்து விலகிக்கொள்வதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து கொண்டிருந்தார்கள் அதற்குள் இவ்வளவு பெரிய பல்டியா?"என்று மித்திரன் கேட்டான்.
"அண்ணா ஒரு பேச்சுக்கு சொல்வதையெல்லாம் நீங்கள் கவுன்ட் செய்து கொள்ளாதீர்கள். நான் உறுதியாக நிமிர்ந்து சொல்லும் விஷயத்தை மட்டும் நம்புங்கள். சரியா" என்றான்.
" சரி தெளிவாக சொல்லு "என்று ராம்குமார் கேட்டார்.
"ஐயோ அப்பா நீங்கள் குறுக்கே வராதீங்க. எனக்கு வார்த்தைகள் வராது அல்லவா?. அண்ணா நான் உங்களிடம் அப்புறமாக தனியாக என்னுடைய ரகசியத் திட்டத்தை சொல்கிறேன்' என்றான்.
"சைத்து... நான் இப்போதே சொல்லிவிட்டேன். எவளையாவது காதலிக்கிறேன் கத்திரிக்காய் வாங்கினேன் என்று சொல்லிக் கொண்டு வீட்டிற்குள் யாரையாவது கூட்டிக் கொண்டு வராதே" பூரணி மிரட்ட,
"ஒரே ஃப்ரிட்ஜுக்குள் சுண்ணாம்பையும் வெண்ணையையும் வைத்து பிரஷ்ஷா காப்பாற்ற ரகசியம் உனக்கு மட்டும்தான் வரும் அம்மா" என்று சைத்ரன் சொன்னான்.
" இது என்ன உள்குத்து?" என்று மித்திரன் கேட்டான்.
" பழைய பழமொழியை மாற்றி சொல்கிறான். ஒரு கண்ணில் வெண்ணை ஒரு கண்ணில் சுண்ணாம்பும் சொல்லுவாங்களே... அதை லேட்டஸ்டா மாத்தி சொல்லுகிறான் " என்று ராம்குமார் அலுத்துக் கொண்டார்.
"அம்மா உன்னை சைத்து என்று சொல்லி இருக்கக் கூடாது. சைத்தான்