"ஓ… அப்போ அண்ணனோட உதவி உனக்கு தேவையில்லை போலிருக்கு."
"அச்சோ அப்படி சொல்லல… நீங்க இல்லாமல் நானா..? நினைச்சுகூட பாக்க முடியாது"
"டேய்னு சொன்ன மாதிரி இருந்துச்சு"
"மன்னிச்சுக்கோங்க…"
"சைத்து, உனக்கு ஏன் இந்த வேலை வக்கீல் வேலை பார்க்கறதா சொல்லிட்டு… போலிஸ் வேலை செஞ்சிட்டு இருக்க… உனக்கு கேஸ் ரிப்போர்ட் வேணும்னா என்னோட துணை வேணும்… அவனையே பகைச்சுக்கறியே"
"அப்பா! நீங்க வேற கொளுத்தி போடாதீங்க அண்ணனை நானே கன்வின்ஸ் பண்ணிக்கிறேன்" என்று சைத்ரன் சொன்னான்.
"ஆமாம் அது எங்களுக்குள்ள இருக்கிற பிரச்சினை. வாடா தம்பி.. நம்ம ரூமுக்கு போகலாம்" என்று அவனை அழைத்துக்கொண்டு மித்திரன் நகர்ந்தான்.
"சீக்கிரம் குளிச்சிட்டு டிரஸ் மாத்திட்டு ரெண்டு பேரும் சாப்பிட வாங்க இன்னிக்கு டிபன் தயாரா இருக்கு. காபி குடிக்கலாம்" என்று பூரணி அவனிடம் சொல்லிக் கொண்டே சமையல் அறைக்கு சென்றுவிட்டார்.
தம்பியின் தோளில் கை போட்டுக்கொண்டு அறைக்குள் நுழைந்த மித்ரன்,
"என்ன நாட்டு நடப்பு எப்படி இருக்கு?. இங்கே சென்னையில் எதுவும் புதுசா என்னுடைய கவனத்திற்கு வருவது போல ஏதாவது பிரச்சினை இருக்கிறதா?' என்று கேட்டான்
'இப்போது வரை அப்படி எதுவும் இல்லை. இதுவரைக்கும் வந்த கேஸ் அத்தனையும் நான் முடித்து விட்டேன். இனி மேல் ஏதாவது வந்தால் உன்னிடமும் ஆலோசனை செய்கிறேன் அண்ணா" என்று சைத்ரன் கூறினான்.
"கண்டிப்பாக உனக்கு உதவ நான் தயாராக இருப்பேன். நம்முடைய நோக்கமே குற்றங்களை கலைவதுதான். ஒவ்வொரு குற்றவாளியும் பிடி பட மாட்டோம் என்று நினைத்துக்கொண்டு குற்றங்களை செய்யும்