தோன்றுகிறது. அங்கே இருந்து கொண்டு இந்த கேசை விசாரிக்க முடியாது. எனவே இங்கே மாற்றல் வாங்கிக்கொண்டு வந்து விட்டேன். இப்போது அந்த கேஸ் உடைய ஆணிவேர் இங்குதான் இருக்கிறது என்று என் உள்மனம் சொல்கிறது. அதையும் முடிப்பேன். ஏனெனில் என்னுடைய சர்வீசில் ஒரு கரும்புள்ளி விழுவதை நான் விரும்பவில்லை"
"கண்டிப்பாக அதை நீங்கள் செய்து முடிப்பீர்கள் அண்ணா. உங்களுக்கு தேவையான உதவியை நானும் செய்வேன். ஏனெனில் இங்கு அடிப்படையான தொடர்புகள் எனக்கு நன்றாகத் தெரியும். சிலர் ரகசியமாகவே உளவு சொல்வார்கள். அவர்களிடம் தேவையான தகவல்களை நான் சேகரித்து வந்து தருகிறேன். நீங்கள் இந்த கேசில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்த்து விடு வீர்கள். என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா"
"கண்டிப்பாக உன்னுடைய உதவி எனக்கு தேவைபடும். ஏனெனில் இந்த ஊர் எனக்கு பழக்கமானது அல்ல. உன்னுடைய உதவி இருந்தால் நான் விரைவாக முடித்து விடுவேன்."
"ரொம்ப நன்றி அண்ணா. நீ என்னை ரொம்பவும் ஊக்குவிக்கிறீர்கள்' என்று சைத்ரன் மித்ரனை கட்டிக்கொண்டான். அப்பொழுது உள்ளே வந்த ராம்குமார்,
" என்னடா இது அதிசயம்?. வெளியேதான் எலியும் பூனையும் போல இருக்கிறீர்கள். அறைக்குள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து கொஞ்சிக் கொண்டிருக்கிறீர்கள்" என்று சிரித்தார்.
" சரி வாங்க… அம்மா நமக்காக காத்திருப்பார்கள். போய் அவங்களுடன் டைம் ஸ்பெண்ட் பண்ணலாம்" என்றார்.
தந்தையின் அழைப்பை ஏற்று இருவரும் விரைவாக உடைமாற்றி அவருடன் ஹாலுக்கு சென்றனர். அங்கே பூரணி தேனீர் கோப்பையுடன் தயாராக இருந்தார். அவரிடம் பேசிக்கொண்டே அப்பா நான் எப்பொழுது உங்களுடைய கம்பெனியை பார்க்க முடியும்?' என்று கேட்டான்.
" எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். ஏனெனில் அது உங்களுடைய கம்பெனி. எனக்கு சிக்கல் என்னவென்றால் எனக்குப்பிறகு யார் அந்த கம்பெனியை பார்த்துக் கொள்வார்கள்? என்பதுதான்.