ஏனெனில் நீங்கள் இருவருமே இப்படி குற்றப்புலனாய்வு பக்கம் திரும்பி விட்டீர்கள். என்னுடையது ரசனை மிக்க வண்ணக் கலவை தயாரிக்கும் தொழில். இதற்கு ரசனை மிக்க ஒரு ஆள் இருந்தால் தான் சிறப்பாக இருக்கும். நான் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்" என்றார்.
"உங்களுக்கு பிறகு என்றெல்லாம் சொல்லாதீர்கள் அப்பா. உங்களுடன் சேர்ந்து பணியாற்ற யாராவது வேண்டுமல்லவா?. சரி, விரைவாக நாம் அண்ணனுக்கு திருமணம் செய்து வைத்து விடுவோம். வரும் அண்ணியைக் கூட்டிக்கொண்டு நீங்கள் சென்று தொழிலை கற்றுக் கொடுங்கள்"
"என்னை ஏன் மாட்டி விடுகிறாய்?. உனக்கு ஒரு திருமணத்தை முடித்து உன் மனைவி அங்கு அனுப்பி தொழிலை கற்றுக்கொள்ள சொல்ல வேண்டியது தானே ?"என்று மித்திரன் சொன்னான்.
"இப்போ எதுக்கு இரண்டு பேரும் சண்டை போட்டு இருக்கீங்க. ரெண்டு பேருமே லைஃப்ல செட்டில் ஆயிட்டீங்க. இனிமே ரெண்டு பேருக்குமே கல்யாணம் பண்ணி வைக்கணும். அதுதான் என்னோட நோக்கம். என்னோட அடுத்த வேலை உங்களுக்கு பெண் தேடுவதுதான்" என்றார்.
"நாம் பெண் பார்த்து திருமணம் செய்வதாக இருந்தால் அது சின்னவனுக்குதான் செய்யவேண்டும் பெரியவனுக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கக் கூடாது அது பெரிய சிக்கலாகிவிடும்" என்று பூரணி அவசரமாக சொன்னாள்.
"என்னமா இது பெத்த பிள்ளைக்கு திருமணம் செய்வதில் சிக்கல் என்ன வந்து விடப்போகிறது?" என்று ராம்குமார் கேட்டார்.
" நான் போன வாரம் இருவருடைய ஜாதகத்தையும் எடுத்துக் கொண்டு நம்முடைய குடும்ப ஜோசியரிடம் சென்று ஆலோசித்தேன். அவர்தான் இப்படி சொன்னார்" என்று பூரணி பேச ஆரம்பித்தார்.
"பெரியவனுடைய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் சரியாக இல்லையாம். அதனால் நாம் பெண் பார்த்து திருமணம் செய்தாலும் அவனுடைய வாழ்க்கை பிரச்சினைக்கு உள்ளாகும்" என்று சொன்னார்.
"ஆனால் எனக்கு அப்படி எல்லாம் சொல்ல வில்லையா. சொன்னால் நானும் இந்த திருமணத் திட்டத்தில் இருந்து தப்பித்துக் கொள்வேன்