பண்ணனும்... அப்பறம் இனி ஒரு வருஷத்துக்கு அவராலும் வேலைக்கெல்லாம் போக முடியாது... அம்மாவோட சம்பளத்துல எல்லாத்துக்கும் செலவு பண்றது கஷ்டம் கோச்.... அதனால இந்த மாசத்தோட நின்னுடலாம்ன்னு இருக்கேன்...”
“என்ன சொல்ற மைத்தி... விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அப்படிங்கறது ரொம்ப முக்கியம்மா... அதுவும் கிரிக்கெட்டுக்கு நீ பயிற்சி மையம் போகாம, சும்மா வீட்டுலையே பண்ணினா அது போதவே போதாது... நீ இந்திய அளவில் தொடர்ந்து விளையாடணும் அப்படின்னா கண்டிப்பா பயிற்சிக்கு வந்துதான் ஆகணும்...”
“இல்லை கோச்... அம்மா சம்பளத்துல ரொம்ப கஷ்டம் கோச்.... நான்தான் நன்னா பால் போட ஆரம்பிச்சுட்டேனே... இனியும் என்ன பயிற்சி பண்ணனும் கோச்...”
“இது என்ன மைத்தி... நீ படிக்கற பாடம் மாதிரியா... அன்னா . ஆவன்னா தெரியும்... இனி நானே படிச்சுப்பேன்னு சொல்ல... எந்த மாதிரி விளையாட்டா இருந்தாலும் அதுக்கு கண்டிப்பா முறையான பயிற்சி இருக்கணும்... அதுவும் தவிர இப்போ நீ தமிழ்நாடு மற்றும் இந்தியா பிளேயர்... தொடர்ந்து அவங்க சொல்ற கோச்க்கிட்ட பயிற்சி எடுத்துதான் ஆகணும்... அப்போதான் அவங்க அடுத்தடுத்த போட்டில செலக்ட் பண்ணுவாங்க... இல்லைன்னா உனக்கு வாய்ப்புகள் கிடைக்கறதும் கடினம்தான்... ஏன் கிடைக்கவே கிடைக்காதுன்னு சொல்லிடலாம்....”
“ஓ இப்போ என்ன பண்றது கோச்.... கண்டிப்பா இப்போ இருக்கற சூழ்நிலைல எனக்கு பீஸ் கட்டறது ரொம்ப கஷ்டம்...”
“ஹ்ம்ம் உங்க நிலைமையும் புரியுது... எனக்கு ஒரு வாரம் டைம் கொடு... அதுக்குள்ள உனக்கு யாரானும் ஸ்பான்ஸர் கிடைக்கறாங்களான்னு பார்க்கறேன்... அப்படி கிடைச்சுட்டா பிரச்சனை இல்லை... உன்னோட செலவு முழுக்க அவங்க பார்த்துப்பாங்க... நீ எந்த கவலையும் இல்லாம இருக்கலாம்... வந்து விளையாடறது மட்டும்தான் உன் வேலையா இருக்கும்...”
“ஓ அப்படி கிடைச்சா ரொம்ப நன்னா இருக்கும் கோச்... அம்மாக்கும் கஷ்டம் இருக்காது... அப்பறம் கோச் முதல் போட்டில என்னால டீம் தோத்து போனதால நான் ஏதோ பெனால்டி மாதிரி கட்டணும் அப்படின்னு கோச் சொன்னார்... அது பத்தி விவரமா ஒண்ணும் தெரியலை... நீங்க கொஞ்சம் கேட்டு சொல்றேளா...”
“அது கான்செல் பண்ணிட்டாங்க மைத்தி... உன்னை பத்தின புகார் எதுவும் போகலை... அதனால பெனால்டி எதுவும் கட்ட வேண்டி வராது... உன்னோட பயிற்சியாளரும் அங்க நடந்ததை சொல்லி இருக்கார்... உன்மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம்ன்னு அவரும், தலைவியும் சேர்ந்து சொல்லி இருக்காங்க... முதல் போட்டி அப்படிங்கறதுனால உனக்கு வார்னிங் மட்டும் வரும்.... உனக்கு பேசின சம்பளம் அப்படியே வந்துடும்... இன்னும் ஒரு வாரத்துல அவங்களே உங்க வீட்டுல தொடர்பு கொல்லுவாங்க.... ஆனா இனிமேல் கவனமா