போஸ்ட்மேன் மூன்று கிலோமீட்டர் தூரம் எப்படி நடப்பது என்று யோசித்துக்கொண்டே வேகாத வெயிலில் நொந்து போய் உட்கார்ந்து இருக்க அவன் முன்னால் வந்து விரல் நீட்டி எச்சரித்தாள் சந்தியா.
எங்கிட்ட வச்சுக்காத என்று சொன்னேனே... கேட்டியா என்று சிரித்தாள். அவள் சிரிப்பு சத்தம் நினைத்து பார்க்கையில் அவனுக்கு எரிச்சலை ஊட்டியது. இப்போ ஏன் இவள் நினைவுக்கு வருகிறாள்.
ஜனனி அக்கானா சும்மாவா... அப்புறம் அவங்க ப்ரண்ட் எப்படி இருப்பாங்க என்று தெரியாமல் இப்படியா மாட்டிக் கொள்வது.
இந்த தடவை சின்ன விஷயம்... சும்மா ஒரு எக்ஸம்புல்... அதற்கே அலறினா எப்படி என்று சிறுவன் ஒருவன் கிண்டல் செய்ய நேரம் டா எனக்கு வாய்விட்டு புலம்பினான்.
சிறிது நேரத்தில் போஸ்ட்மேன் அண்ணா... இது உங்க சைக்கிள் சாவியா... ரோட்டாண்டை கீழே கிடந்ததாம். நீங்க தான் தொலைச்சிட்டு தேடுனிங்கனு சந்தியாக்கா தந்தாங்க... இந்தாங்க என்று அவன் கையில் கொடுத்தாள் சிறுமி ஒருத்தி.
சந்தியா எங்கே போன...
போஸ்ட் ஆபீஸ்மா. இந்த ஜனனி போஸ்ட் பண்ணியிருக்கா. ஃபோன் பண்ணினால் எடுக்காமல் ரிஜிஸ்டர் போஸ்ட் அனுப்பி இருக்கா. வரவர திமிரு அதிகமாகிட்டு என்று வாயால் அர்ச்சனை செய்துகொண்டே போஸ்ட்டை திறந்தாள்.
ஏய்... வாயை மூடு. என்ன போஸ்ட் அனுப்பி இருக்கானு பாரு... பயமா இருக்கு... பிள்ளைக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்று வேண்டுறத விட்டு விட்டு வாயாடிட்டு இருக்க... வாய மூடிக்கிட்டு வேலையை செய் என்று படபடத்தாள் அவள் தாய்.
போஸ்ட்டை திறந்தவள் கீழே விழுந்ததைக் கவனிக்காமல் ஜனனி எழுதின கடிதத்தை படிக்க ஆரம்பித்தாள்.
அன்புள்ள சந்தியா, இப்பொழுது என்ன சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை...
அம்மா சொல்ல வேண்டியதை சீக்கிரம் சொல்லித் தொலைக்க வேண்டியது தான... அந்த கழுதை எழுதி இருப்பதைப் பாருங்க.. சொல்ல வேண்டியதை சொல்லாமல் இழுத்து அடிக்குது பாருங்க என்று அலட்டிக் கொள்ள, ஏண்டி தேவையில்லாத விஷயத்தை எல்லாம் பேசாதடி... என்ன எழுதி இருக்கிறாள் என்று படி.
இந்த அம்மா வேற ... ஜனனியின் ஜால்ராவா மாறி போயாச்சு என்று என்று கழுத்தை நொடித்து கொண்டவள்,படித்தாள்.
"எனக்கு நாளைக்கு திருமணம். இந்த லெட்டர் உடன் விமான டிக்கெட்டும்