அனுப்பியிருக்கிறேன். உடனே கிளம்பி வா. இப்படிக்கு ஜனனி" என்று படித்து முடித்தவள் அம்மா வாசித்து முடித்துவிட்டேன்... போதுமா என்றவளுக்கு அப்போது தான் உறைத்தது, "திருமணம்" என்ற வார்த்தை.
திருமணமா.... என்று அலறியவள் மீண்டும் எடுத்துப் படித்துப் பார்த்து விட்டு கீழே விழுந்த பேப்பரை எடுத்துப் பார்த்தாள். அது விமானத்தில் டிக்கெட் புக் செய்து என்று புரியவும் சந்தியாவிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் அங்குமிங்கும் தேடினாள்.
என்ன சந்தியா... என்ன தேடுற...
ம்மா... என் போனை பார்த்தீங்களா என கேட்க வேகமாக சென்று அவள் போனை எடுத்து கொடுத்தாள். இதுக்கு தான்ஒரு இடத்தில் வை. அப்பொழுதுதான் தேடும்பொழுது உடனே கிடைக்கும் என்று சொல்ல தாய்க்குரிய எதுவும் அவள் காதில் விழவே இல்லை.
அவசரத்தில் மொபைலின் பேட்டன் லாக்கை கூட தவறாக அடிக்க மொபைல் ஓபன் ஆகவில்லை. ச்சே.. என்று அலுத்துக் கொண்டவள் மீண்டும் முயற்சி செய்து மொபைலை அன்லாக் செய்து ஜனனி நம்பருக்கு அழைத்தாள்.
ரிங் அடித்துக் கொண்டே இருக்க அழைப்பு ஏற்கப்படவில்லை. மீண்டும் அழைத்து பார்த்தாள். உங்கள் அழைப்பை ஏற்கவில்லை என்று தகவல் சொல்ல, அம்மா இந்த ஸ்வீனா எதோ பிளான் போட்டு ஜனனியின் வாழ்க்கையை அழிக்க பார்க்கிறாள். ஆனால் இவளோ அது புரியாமல் அவள் சொல்வதெல்லாத்துக்கும் சரி என்று தலையை ஆட்டி வைக்கிறாள். இப்பொழுது என்ன செய்வது என்று யோசித்தவள், அம்மா எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்த வேண்டும். இப்பொழுது என்ன செய்வது என்று கேட்டுக்கொண்டே அப்படியே அமர்ந்து விட்டாள்.
தொடரும்
Next episode will be published as soon as the writer shares her episode.