தயாரிப்பு விவரங்களை கொண்டு வர சொல்லி இருக்கேன். டின்ட்டுல அளவு மாறி இருந்தா.. உன் சினேகிதியோட நஷ்டத்தை சரி செய்ற பொறுப்பை நான் ஏத்துக்கறேன்." அவர் பேசிக் கொண்டே அவருடைய கேபினுக்குள் நுழைந்தார்.
அங்கு ஏற்கனவே மித்ரனும் சைத்ரனும் இருந்தார்கள். மயூரியும் ஹைந்தவியும் உள்ளே வருவதை பார்க்கவும் இருவருக்கும் வெவ்வேறு அதிர்வுகள் ஏற்பட்டன.
"ஹைடி…" என்று சைத்ரன் மெல்ல முனகினான்.
"உனக்கு தெரிந்த பெண்ணா?" என்று மெல்லிய குரலில் மித்ரன் விசாரித்தான்.
"ஆங்.. அப்புறமா சொல்றேன்" என்று கிசுகிசுத்தவன் ஹைந்தவியிடம் கேள்வியாக பார்வையை வீசினான். அவனுடைய சைகையை புரிந்து கொள்ளாமல்…
"ஏய்… சைத்ரு… இங்க என்ன செய்ற." சினேகிதனை பார்த்த உற்சாகத்தில் குரல் தந்தாள். சைத்ரன் திடுக்கிட்டு தந்தையை பார்த்தான்.
"ஓ… ஹைந்தவியை உனக்கு தெரியுமா…?" அவர் கேட்க..
"தெரியுமாவா… திக் ஃப்ரெண்ட்ஸ் சார்… ரொம்ப க்ளோஸ்… என்னோட லைஃப்.."
"ஆமாம் அப்பா… மிஸ். ஹைந்தவி பி2 ஸ்டேஷன்ல எஸ்.ஐயா இருக்காங்க. ஏதாவது கேஸ் விஷயமா பேசிக்குவோம்." அவளை மேலே பேச விடாமல் சைத்ரன் குறுக்கிட்டான்.
"அப்படியா.. சைத்து?." ராம்குமார் கவனமாக சொன்னார்.
"அப்படியா சைத்ரு?" ஹைந்தவி கதை கேட்கும் பாவனை காட்டினாள்.
'உயிரே தயிரேனு ஊர் சுத்தினது… காதல் கத்தரிக்காய்னு கதை விட்டது… எல்லாமே பொய்யா.. அடப்பாவி உன்னை நம்பி நிறைய கேஸ் பற்றி டிபார்ட்மென்ட் இன்பர்மேஷன்ஸ் வேற தந்திருக்கேன்…' ஹைந்தவி கடுப்பானாள்.
அவளை பார்த்து சைத்ரன் திருதிருனு முழிக்க..
'இவன் ஏன் மிரள்றான்...ஏதோ விஷயம் இருக்கு போலயே' என்று மித்ரன் ஊகித்தான்…
"சார் நான் கிளம்பறேன். இன்னிக்கு புது ஏஎஸ்பி வர்றார். அவருக்கு