(Reading time: 9 - 18 minutes)
Nesam nalgum nayanilan nencham
Nesam nalgum nayanilan nencham

இப்போநுதான் முதல்முறையாக ஒரு டெட்ராகுரோமேட்டை பார்க்கிறேன்.. குட்..  நீ சொன்ன கம்ப்ளைன்டை ஒப்புக்கறேன். உன்னோட நஷ்டத்தை சரி செய்யறேன். ப்ளஸ் பணமாகவும் காம்பன்ஷேஸன் தர்றேன்."

மயூரி ஆச்சரியமாக பார்த்தாள். அவள் சொல்வதை புரிந்து கொண்டாரா…! பலருக்கு அது புரியாமல் அவளை கலர் ப்ளைன்ட் என்று சொல்லுவார்கள்...

"மயூரிஉனக்கு டைம் கிடைக்கறப்போ வாம்மா. ஐ ஹாவ் எ ப்ளான். நாம டிஸ்கஸ் பண்ணலாம்" அவர் தெரிவித்தார்.

"கண்டிப்பா சார்…" நன்றி தெரிவித்து மயூரி கிளம்பினாள். அவளுடன் நடந்த ஹைந்தவி சைத்ரனை பார்த்து முறைத்தபடி சென்றாள்.

'கேஸ் விஷயமாதான் பேசுவியாடாஅப்புறமா பார்த்துக்கறேன்ஒரு  கொலை முயற்சி கேஸை பத்தி பேசலாம்டா..'

அவர்கள் செல்லவும் சட்டென்று சைத்ரன் எழுந்தான்.

"ஒரு க்ளைன்ட்டை பார்க்கனும் டாட் நான் வர்றேன்"

"எப்படி இருந்தாலும் வீட்டுக்கு வந்தாகணும்லசாயந்திரம்  க்ளைமாக்ஸை பார்க்க போற…" ராம்குமாரும் மிரட்டினார்.

"ஈஸி டாட்நான் என்ன விஷயம்னு விசாரிச்சு சொல்றேன்" மித்ரனும் எழுந்தான்.

தம்பியுடன் பேசிக் கொண்டே நடந்தாலும் மித்ரனுக்குள் மயூரியை பற்றிய தேடல் இருந்தது. அவள் யார்…!

சட்டென மனதில் மின்னல் வெட்டியது… அந்த மிலிட்டரி ஆஃபிசர் ஜ்வாலேஷ் மேத்தாவின் கேஸில் இந்த பெண்ணும் இருக்கிறாளேஅவருடைய ஃபைலில் மயூரியின் புகைப்படத்தை பார்த்திருக்கிறான். அதுவும் மோசமான குறிப்போடு…!

அவருடைய காதலி என்றும்… அவளை பார்க்கவே அடிக்கடி சென்னைக்கு வந்ததாகவும்.. கடைசியில் அவர் காணாமல் போனதும் சென்னையில்தான் என்றும் இருந்ததே…  பணத்துக்காக வயதானவருடன் பழக்கமா..?

சை… ! மயூரியின் முகம் கசந்து வழிந்தபடி அவனுடைய ஆழ்மனதில் இடம்பிடித்தது.

(தொடரும்)

Next episode will be published on 8th Dec. This series is updated weekly on Tuesday evenings.

Go to Nesam nalgum nayanilan nencham story main page

14 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.