“அது செரி...இப்ப என்ன கோரிக்கையோட எனக்கு போன் பண்ணியிருக்கே?” மணிவாசகம் கோபமாய்க் கேட்டான்.
“டேய்...டேய்.ஏண்டா இப்படிப் பேசறே?...சும்மா உன் கூடப் பேசி ரொம்ப நாளாச்சே?ன்னுதாண்டா கூப்பிட்டேன்” பொய் சொன்னான் ரவீந்தர்.
“அய்யோ சாமி...உலக மகா நடிப்புடா” என்று சொன்ன மணிவாசகம், “நீயெல்லாம் ஏதாவது தேவை!ன்னா மட்டும்தானே என்னைக் கூப்பிடுவே?” என்றான்.
“அடப் போடா.... “சரி...ஃப்ரீயா இருக்கோமே?...நண்பர்களுக்கெல்லாம் போன் பண்ணிப் பேசுவோம்”ன்னு நெனச்சுக் கூப்பிட்டேன் பாரு?...என்னைச் சொல்லணும்” பாவ்லா காட்டினான் ரவீந்தர்.
“சரி...நம்பறேன்...சொல்லு இப்ப எந்த ஊர்ல இருக்கே?...எப்படியிருக்கு உன்னோட மார்க்கெட்டிங் வேலையெல்லாம்?....இன்னமும் அந்த இட்லிக் கடைக்காரியை சைட் அடிச்சிட்டுத்தான் இருக்கியா?” அந்த மணிவாசகம் சிரித்தவாறே கேட்க,
“சேச்சே..அதெல்லாம் காலேஜோட சரி....வேலைக்குன்னு வந்ததுக்கு அப்புறம்...எல்லாமே மாறிடுச்சு!...மார்க்கெட்டிங்...மன்த்லி டார்கெட்டுன்னு..அதையே துரத்திட்டு ஓட வேண்டியிருக்கு!...இதுல காதலாவது...கல்யாணமாவது!” என்றான் ரவீந்தர்.
“இப்ப டியூட்டி எங்கே?”
“கோயமுத்தூரில்தான் ஷேமமா இருந்திண்டிருக்கேன்!.....மார்க்கெட்டிங் வேலையும் நன்னா போயிண்டிருக்கு!...” என்றான்.
“என்னடா திடீர்னு பிராமண பாஷை?...ஐயர் பொண்ணு எதையாச்சும் டாவடிச்சிட்டிருக்கியா?” மணிவாசகம் கிண்டலடித்தான்.
“க்கும்...அதான் சொன்னேனே?...அதுக்கெல்லாம் நேரமேயில்லை!...சேல்ஸ் டார்கெட் அச்சீவ் பண்ணவே நேரம் சரியாயிருக்கு” என்ற ரவீந்தர், “டேய்...நம்ம கூடப் படிச்சானே சுதாகர்..அவனை ஞாபகமிருக்கா?” கேட்டான்.
“ம்...நல்லா ஞாபகமிருக்கு!...பொள்ளாச்சிக்காரன்!...ஏன் அவனுக்கென்ன இப்போ?...அவன் உங்க கம்பெனில ஜாய்ன் பண்ணப் போறானா?”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை!...உன் கிட்ட அவனோட மொபைல் நெம்பர் இருந்தா குடுடா”
“என்னடா திடீர்னு அவன் நெம்பர் கேட்கறே?” கொக்கி போட்டான் ம்ணிவாசகம்.
“அதான் சொன்னேனே?... “ஃப்ரியா இருக்கேன்...நம்ம பசங்க ஒவ்வொருத்தருக்கும் போன் பண்ணிட்டிருக்கேன்”னு...அவனுக்கும் போன் பண்ணிப் பேசலாம்!னுதான் கேட்கறேன்” பதில் சொன்னான் ரவீந்தர்.