ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இங்கிலாந்து மகளிரணி...
அதே டீம்... மைத்தி முதன்முதலில் விளையாடி, விளையாட்டில் நிறைய சூதுண்டு என்று அறிய உதவிய அணி... அப்பொழுது விளையாடிய அதே வீராங்கனைகள்... மைத்தி முழு உத்வேகத்துடன் எதிரணியை வீழ்த்த தயார் நிலையில் இருந்தாள்.... இந்திய அணி பந்து வீச ஆரம்பிக்க முதல் பத்து ஓவர் வேகப்பந்து வீச்சில் இங்கிலாந்து அணி ஐம்பது ஓட்டங்கள் விக்கெட் இழக்காமல் எடுத்திருந்தது... பதினொன்றாம் ஓவர் வீசிய மைத்தி ஒரு விக்கெட் எடுக்க இந்தியாவிற்கு முதல் பிரேக் கிடைத்தது...
அதன் பிறகு இந்தியாவிற்கும், இங்கிலாந்திற்கும் கடும் போட்டி... நாற்பத்தெட்டு ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களை எடுத்திருந்தது இங்கிலாந்து... இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் நாற்பத்தொன்பதாவது ஓவரில் ஒரு விக்கெட்டை வீழ்த்தி ஐந்து ரன்களை கொடுத்திருந்தார்...
கடைசி ஓவர்.... ஆறு பந்துகளில் நான்கு ரன்கள்... நான்கு விக்கெட்டுகள் கையில் இருந்தன... வெற்றி இங்கிலாந்து வசமே என்ற முடிவிற்கு வர்ணனையாளர்கள் வந்திருந்தனர்...
இறுதி ஓவர் வீச மைத்தி வந்தாள்... களத்தில் இருந்தது மைத்தியின் முதல் வெளிநாட்டு போட்டியில் அவளைத் திசை திருப்பிய பெண்.... இந்த முறையும் அவளைக் கடந்து மைத்தி நடக்கும்போது இந்தியர்களை பழிக்கும் விதத்தில் பேச அவளைப் பார்த்து சிரித்தபடியே நகர்ந்தாள் மைத்தி.... நான்காண்டு விளையாட்டு கற்றுக் கொடுத்த பொறுமை....இந்தியாவின் கேப்டன் மைத்தி அருகில் வந்து ஏதேனும் பிரச்சனையா என்று கேட்க, மைத்தி சிரித்தபடியே , “Get Ready for celabration captain”, என்று கூற தலைவியும் சிரித்தபடியே மைத்தியின் தோள்களை தட்டிவிட்டு சென்றாள்....
முதல் பந்தை சுழல் முறையில் போட தடுத்தாடிய எதிரணி வீராங்கனை ஒரு ஓட்டத்தை எடுத்தாள்... ஐந்து பந்துகள் மூன்று ரன்கள்.... அடுத்த பந்தை அளவு குறைவாக சுழல் முறையில் வீச , எதிரணி வீராங்கனை தடுத்தாட முற்பட பந்து பாடிற்கும், பேட்டிற்கும் நடுவில் புகுந்து நேரடியாக நடு ஸ்டம்ப்பை அடித்துத் தூக்கியது.... பறக்கும் முத்தத்தை எதிரணி வீராங்கனைக்கு கொடுத்து பெவிலியனுக்கு அவளை திருப்பி அனுப்பினாள் மைத்தி...
அடுத்த பந்தை சற்றே வேகமாக வீச எதிரணி வீராங்களை அடித்து ஆட முற்பட பந்து மட்டையில் படாமல் சென்றது... அடுத்த பந்திற்கும் இதே நிலை..... மூன்று பந்துகள், மூன்று ரன்கள், மூன்று விக்கெட்டுகள் என்ற நிலை...
இரு நாட்டு வீராங்கனைகளும் கூடி பேசினர்... தலைவியும், மற்ற சக வீராங்கனைகளும் மைத்தியை ஊக்கப்படுத்தினர்....