யாருமே எதிர்பார்க்காத வெற்றி... கடைசி ஓவர் வரை வெற்றி எதிரணியின் பக்கமே இருந்தது... அந்த எதிர்பார்ப்பை கடைசி மூன்று பந்துகளில் தவிடு பொடியாக்கி வெற்றியை இந்தியாவின் வசமாக்கினாள் மைத்தி... அதுவும் hat-trick விக்கெட்டுடன்....
மைத்தியின் குடும்பத்தில் அத்தனை சந்தோஷம்.... நடு இரவாக இருந்தாலும் பத்ரியும், காமேஷும், மாதுவும் பாட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.... உலகக்கோப்பை என்பதால், அதுவும் தங்கள் தெருவிலிருக்கும் பெண் சென்று விளையாடுகிறாள் என்பதால் அந்தத் தெருவே அன்று வானொலி மற்றும் தொலைக்காட்சியின் அருகிலேயே இருந்தது.... இந்தியா வெற்றி பெற்றவுடன் மற்றவர்களும் தெருவிற்கு வந்து சுப்பிரமணியம் குடும்பத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்... நடு இரவாக இருந்தபோதிலும் கற்பகம் பாட்டி மைசூர்பாகு செய்து அந்தத் தெரு வாசிகளுக்கு வழங்கினார்...
பரிசு வழங்கும் விழா துவங்கியது.... போட்டியின் நாயகியாக மைத்தி தேர்ந்தெடுக்க பட, பரிசைப் பெற்றுக்கொண்டபின் மைத்தியை பேச அழைத்தார்கள்....
“congrats மைத்ரேயி.... இன்னைக்கு ரொம்ப அபாரமா இருந்தது உங்க சுழல் பந்து வீச்சு... இந்த வெற்றியை நீங்க எதிர்பார்த்தீங்களா....”
“நன்றி சார்... கடைசி ஓவர் வரை வெற்றி இரண்டு பக்கம்தான் இருந்தது.... என்னால் முடிந்தவரை அவர்களை ரன் எடுக்காமல் தடுக்க வேண்டும் என்ற நினைப்புடன்தான் கடைசி ஓவர் பந்து வீசினேன்.... வேகமாக ரன் எடுத்து வெற்றி பெறவேண்டும் என்று எதிரணி செய்த சில தவறுகள். மற்றும் அவர்களின் அவசரத்தனம், பந்தை கணிக்காத முறை இவை இந்தியாவிற்கு சாதகமாக அமைந்து வெற்றியை எங்கள் பக்கம் திருப்பி விட்டது....”
“இது எல்லாம் இருந்தாலும் உங்கள் சுழல் பந்து வீச்சும் அபாரமாக இருந்தது... நான் சில வீராங்கனைகளிடம் பேசும்போது அவர்கள் கூறியது உங்கள் பந்தை எதிர்கொள்வது அத்தனை கடினமாக இருந்ததென்று... சுழல் எப்படி திரும்பும் என்றே சொல்ல முடியாத படி இருப்பதாக கூறினார்கள்... இதற்கென்று தனியாக ஏதேனும் பயிற்சி எடுத்தீர்களா....”
“தனியாக என்று இல்லை.... முதலில் இருந்தே நான் பந்து வீசும் முறை மற்ற வீராங்கனைகளிடமிருந்து சற்றே மாறுப்பட்டிருக்கும்... அதை என் பயிற்சியாளர் பாஸ்கர் சார் அவர்கள் மேலும் மெருகேற்றினார்... இன்று நான் நல்ல முறையில் பந்து வீச மிக முக்கிய காரணம் அவர்தான்.... அவருக்கு நான் எத்தனை நன்றிகள் சொன்னாலும் போதாது....”
“சூப்பர்.... கடைசி கேள்வி... இன்றைய இளம் வீராங்கனைகளுக்கு நீங்க என்ன சொல்ல விரும்பறீங்க....”
“அவர்களை விட அவர்கள் குடும்பத்துக்கு தான் சொல்ல விரும்பறேன்... இன்னைக்கு நான்