தொடர்கதை - என் உயிரானவள்... – 06 - பத்மினி செல்வராஜ்
தன் அருகில் மணமேடையில் மணமகனாய் அமர்ந்து இருப்பவன் வினோதன் அல்ல அந்த துஷ்டன் என புரிய அதுவும் அவள் கழுத்தின் அருகில் அவன் கையில் தாலியை பிடித்து கொண்டு கட்டுவதற்கு தயாராக இருப்பதை உணர்ந்ததும் திடுக்கிட்டவள் அவசரமாக மணமேடையில் இருந்து எழுந்திருக்க முயன்றாள் மணிகர்ணிகா....
ஏற்கனவே அருகில் இருந்தவன் மிகவும் நெருக்கத்தில் அமர்ந்து இருந்ததால் அவளால் உடனே எழுந்திருக்க முடியவில்லை.
அவளின் எண்ணத்தை புரிந்து கொண்டவன் அவள் எழுந்திருக்க விடாமல் அதற்குள் அவசரமாக அந்த பொன் தாலியை மணுவின் கழுத்தில் அணிவித்திருந்தான் துஷ்யந்த்....
நொடிப்பொழுதில் எல்லாம் நடந்து முடிந்திருக்க, சி ... எதுவுமே அவளுக்கு பிடிக்கவில்லை...எல்லாம் தன்னை மீறி போய்விட்டது..அவள் கை மீறி எல்லாமே நடந்து விட்டது என்று ஆற்றாமை மனம் எங்கும் பரவி தவித்தது....
அதை கண்டதும் இன்னுமே இறுகி போனாள் மணு..
This story is now available on Chillzee KiMo.
...