அர்ச்சனா புரிந்து கொண்டாள், “ஆஹா...அந்த நாயோட ஆபீஸுக்குப் போய்...அதைத் திட்டிட்டு வந்த தகவல் இங்க வீடு வரை வந்திடுச்சு போலிருக்கே!...நாட்டுல தகவல் தொடர்பு ரொம்பவே முன்னேறிடுச்சுப்பா!”
“ஏண்டி..உன் மனசுல நீ என்னதான் நினைச்சிட்டிருக்கே?...அதான் நேத்திக்கு எங்க கிட்டேயே உன் பதிலைச் சொல்லிட்டியல்ல?.. “அந்த மாப்பிள்ளைக்குக் கழுத்தை நீட்ட முடியாது!”ன்னு...அத்தோட நிறுத்திட வேண்டியதுதானே?...அதுக்கப்புறமும் எதுக்குடி.. அந்த மனுஷன் வேலை பார்க்கற பேங்கிற்குப் போயி...அவரை அவமானப்படுத்தினே?”
“அம்மா...அந்த ஆளு நம்ம அக்காவுக்கு பண்ணின அவமானத்துக்கு பதிலடி குடுக்க வேணாமா?...அதான் அக்கா சார்புல நான் போய்க் குடுத்திட்டு வந்தேன்!” சற்றும் அஞ்சாமல் தெளிவாய்ச் சொன்னாள் அர்ச்சனா.
அதுவரையில் அமைதி காத்து பொறுமையாய் அமர்ந்திருந்த தேவநாதன், கரகரத்த குரலில் மெல்லக் கேட்டார், “ஏம்மா...இதெல்லாம் நல்லாவா இருக்கு?...ஒரு பள்ளிக்கூட வாத்தியார் தன் பொண்ணை இப்படி வளர்த்திருக்காரேன்னு என்னைத்தாம்மா எல்லோரும் கேவலமாய்ப் பேசுவாங்க?”
நிதானமாய் நடந்து, தந்தையின் அருகில் சென்று நின்ற அர்ச்சனா, “அப்பா...அக்காவுக்கு பெரிய கேவலம் நடந்திருக்கு!...அதை மறந்திடாதீங்க!..”
“சரி...அதுக்காக?”
“தப்பு செய்யறவங்களை யாருமே எதிர்க் கேள்வி கேட்காததினாலதான் அவங்க தப்பு மேலே தப்பு செஞ்சிட்டே இருக்காங்க!...என்னைய மாதிரி ஒருத்தர் துணிஞ்சு கேட்டாத்தான்...அதுக்கப்புறம் தப்பு செய்யவே யோசிப்பாங்க!”
“ஏய்...நீ என்ன பெரிய சண்டி ராணியா?...தப்பையெல்லாம் தட்டிக் கேட்க?” பார்வதி சீறிக் கொண்டு வந்தாள்.
“ம்மா...தப்பைத் தட்டிக் கேட்க சண்டி ராணியாய்த்தான் இருக்கணும்கற அவசியமில்லைம்மா...சாதாரண மனிதனும் கூடக் கேட்கலாம்!”
“ச்சை...உன்னையெல்லாம் திருத்தவே முடியாது!...நீ எக்கேடோ கெட்டுப் போ!” சொல்லி விட்டு பார்வதி சமையலறை நோக்கிச் செல்ல,
தேவநாதனும் அதே பாணியில் தன் முகத்தை திருப்பிக் கொள்ள,
லேசான மனச் சங்கடத்துடனேயே உள் அறையை நோக்கி நடந்தாள் அர்ச்சனா.
என்னதான் அப்பாவும், அம்மாவும் தான் செய்த அந்தச் செயலுக்காக தன்னைத் திட்டினாலும், நிச்சயம் அக்கா சுலோச்சனா தன்னைப் பாராட்டுவாள், என்று எண்ணிய அர்ச்சனாவின் எண்ணத்தில் இடி விழுவது போல் சுலோச்சனா, அர்ச்சனாவைப் பார்த்ததும், “ஏண்டி அப்படிச்