ஆடிட்டரிடம் சொல்வதாக கூறினார்.
நிரஞ்சன், செட்டியார் சொன்னபடி, அந்தப் பகுதி யிலேயே த்ரீ பெட் ரூம் வீடு தேடினார். புரோக்கரிடமும் சொல்லி வைத்தார்.
எல்லோரும் இறைவன் உதவிக்காக பிரார்த்தனை செய்தனர்.
குறிப்பிட்ட தேதியில் வெளியூர் ஓனர்கள் வந்து சேர்ந்ததும், முதலில் வக்கீல் வீட்டுக்குச் சென்று பிளாட் பத்திரத்தை தந்தனர். அவர் சரிபார்த்து ஓ.கே. சொல்லி விட்டார்.
அக்ரிமெண்ட் தயார் செய்து, கையெழுத்திட்டதும் அட்வான்ஸ் தொகை பெற வேண்டியதுதான்!
" வக்கீல் சார்! கொஞ்சம் பொறுங்க! இன்று ஓனர்கள் எல்லோரும் ஒரு மீட்டிங்கில் குடித்தனம் இருப்பவர்களிடம் சில விஷயங்களை பேசி முடிவு எடுத்ததும், ஆடிட்டரிடம் பணத்துக்கு ஏற்பாடு செய்ய சொல்வோம்....."
"தலைவரே! அதற்கும் நாம் அட்வான்ஸ் பெறவும் என்ன தொடர்பு? இதை ஏன் தடுக்கிறீர்கள்?"
" ஒரு நாள் தானே டிலே ஆகும். இன்று மீட்டிங் நடந்து முடிந்ததும், நாளை பெறலாமே அட்வான்ஸ்!"
" எப்படியும் நானும் நிரஞ்சனும் ஆடிட்டரிடம் பேசி, பிறகு அவர் செட்டியாரி டம் அனுமதி கேட்டு, பணம் கிடைப்பதற்கு, ரெண்டுமூணு நாளாகும். பணம் ரெடியான வுடனே, நிரஞ்சன் உங்கள் அனைவருக்கும் சொல்வார். சரியா?"
ஓனர்கள் சலிப்புடன் வெளியே வந்தனர்.
" தலைவரே! மீட்டிங்லே டென ன்ட்கள் என்ன பேசப் போறாங்களாம்?" " திடீர்னு, அவங்களை பிளாட்டை காலி செய்யச் சொன்னால், அதில் உள்ள கஷ்டநஷ்டங்களை கூறி நியாயம் கேட்பாங்கன்னு நினைக்கிறேன்....."
" அவ்வளவுதானே! சரி, பார்ப்போம்!"
மீட்டிங் குறித்தநேரத்தில் துவங்கியது. இருபது ஓனர்களும் பத்து குடித்தனக் காரன்களும் வந்திருந்தனர்.
நிரஞ்சன் துவக்கத்தில் பேசினார்.
" நீங்க விரும்பியபடி நாங்க எல்லா ஓனர்களும் வந்திருக்கிறோம். உங்களில் யாரேனும் ஒருவர் பேசலாம்."
வக்கீல் பேசினார். " முதலிலே, ஓனர்கள் எல்லாரும் விரைவிலேயே கோடீஸ்வரன்கள் ஆகணும்னு வாழ்த்துகிறோம். ( கைதட்டல்) உங்கள் வெற்றியினால், மகிழ்ச்சி உங்களுக்கு மட்டும் அல்ல, எங்களுக்கும்தான்.
ஏன் தெரியுமா? நாங்க பத்து பேரும், ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் ஆனால் உண்மை, மற்ற பத்து ஓனர் களுடன் இருபது வருஷமாக இங்கே ஒற்றுமையாக வசித்து வருகிறோம்.