நடக்கும்னு ஜோசியர் சொல்லியிருக்கார். சைத்துக்கு மட்டும்தான் நம்மை பார்த்து வைக்கணும். நீங்க இப்ப ஏன் மாத்தறீங்க?"
"ஏன்னா… நானும் உன்னை மாதிரியே ஒருத்தருக்கு வாக்குறுதி கொடுத்து இருக்கேன். வாக்குறுதி கொடுக்க உனக்கு மட்டும் தான் தெரியுமா... நான் சொல்றதை நீ கேட்டுக்கொள்வாய் என்ற நம்பிக்கையில் நான் கொடுத்துட்டேன்."
"என்ன வாக்குறுதி…?" பூரணி அதிர்ச்சியாக கேட்டார்.
"என்னோட நண்பர் ஒருத்தருக்கு அவரோட பொண்ணை சைத்ரனுக்கு கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்து இருக்கேன்."
" நீங்க ஏன் அவனை பத்தி பேசினீங்க?"
" நீ தானே ஏற்கனவே சொன்னியே மித்ரனுக்கு லவ் மேரேஜ் தான் செய்யணும். சைத்ரனுக்குதான் நாம பேசி முடிக்க முடியும். அதனாலதான் சைத்ரனுக்கு என்றே பேசி முடித்து விட்டேன். அந்த பொண்ணுக்கும் சைத்ரனை பிடித்து விட்டது. அந்த பெண்ணை ஏமாற்ற கூடாது…"
"அது சரி… இந்த விஷயம் சைத்ரனுக்கு தெரியுமா?. அவனுக்கு பொண்ணை பிடிக்கனுமே"
"என்னவொரு கவலை… நாம சொன்னால் அவன் செஞ்சாகணும் பூரணி…"
இதைதான் ப்ளேட்டை திருப்பி போடுறது என்று சொல்லுவார்களோ… பூரணி சொன்னதையே அவரும் சொல்கிறார்… அவரை மறுத்து பேச முடியாமல் பூரணி திணறினார்.
"ப்ச்… நான் மிஸ்ஸுக்கு வாக்கு தந்திருக்கேனே" பூரணி குரல் மெலிந்திருந்தது.
"அதையும் காப்பாத்தலாம் பூரணி.."
"எப்படிப்பா?"
"மித்ரனுக்கு லவ் மேரேஜ்தானே. மயூரியை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகட்டும்."
"இதெல்லாம் ஒரு ஐடியாவா… நாம பெரியவங்களா லட்சணமா நடந்துக்கணும்.."
"அதை செய்திருந்தோம்னால் தேர்தல் வாக்குறுதி மாதிரி ஆளாளுக்கு