என்று நினைக்கிறியா குயிலி என்று அந்த பெண் கேட்டாள்.
யார் இவள் என்பது போல அவள் முகத்தை பார்க்க என் பெயர் மல்லிகா... நான் ராகவ்வின் சித்தி...
ராகவ்வா என்று குயிலி இழுக்க, ஆமா குயிலி மல்லிகா பிரதாபன் உடைய தம்பி சத்யா மனைவி என்றார் ராமு.
குயிலி சந்தேகமாக மல்லியை பார்க்க நீ என்னை நினைத்து பயப்படவோ யோசிக்கவோ வேண்டாம். ராகவ்வோட திட்டப்படி அதாவது கார்த்திக் ஐடியா படி உங்களை கடத்தினது தங்கள் ஆட்கள் தான் என்று பிரதாபன் சத்யா இருவரையும் நம்ப வைத்து விட்டோம். அப்படி அவர்களுக்கு சந்தேகம் வந்தாலும் உலகம் முழுவதும் தேடுவார்களே தவிர தன் வீட்டில் தேட மாட்டார்கள். அதனால் இங்கு உங்களுக்கு பாதுகாப்பு என்று இங்கு அழைத்து வந்து விட்டோம்.
ஆனால்... என்னிடம் உண்மையை சொல்லி இருக்கலாமே...
வீட்டில் வைத்து உன்னிடம் உண்மையை சொல்வதை விட நீ வெளியே சென்றதும் உண்மையை சொல்லலாம் என்று சொல்லி உன் வீட்டுக்கு ஆட்களை அனுப்பி இருந்தான். ஆனால் நீ வீட்டிற்கு செல்லாமல் தெரசா இல்லத்திற்கு சென்று ஆசிர்வாதம் தாத்தாவை அழைத்து கொண்டு ஊருக்கு சென்று விட்டாய். ஊரில் உன்னை தேடியும் ஆட்கள் வந்தார்கள். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை. தேனி திருவிழாவில் உன்னை பார்த்த பிறகு தான் உன்னை தேடி கேரளா வந்தார்கள். ஒரு வழியாக மூணாரில் உன்னை கண்டு கொண்டார்கள்.
சரி... அப்போதாவது உண்மையை சொல்லி இருக்கலாமே...
சொல்லி இருக்கலாம் தான்.... ஆனால் அதனால் பிரச்சினை பெரிதாகும். உன்னை அங்கு பார்க்கும் போது பிரதாபன் ஆட்களும் இருந்தார்கள். அவர்களை வைத்து மிரட்டி தான் உன்னை அவர்கள் கடத்தி விட்டதாக சத்யாவை நம்ப வைத்தோம். அப்போது உன்னிடம் உண்மையை கூறினால் அதில் எவனாவது ஒருத்தன் ராகவ்விற்கு தான் தான் கார்த்திக் என்ற உண்மை தெரிந்து விட்டது என்று சொல்லி விட்டால் மற்றவர்களை காப்பாற்ற முடியாமல் போய் விட கூடாது என்று நினைத்து தான் உன்னிடம் உண்மையை மறைத்து விட்டோம்.
மற்றவர்களா... என்னையும் ராமுவையும் பாதுகாப்பாக கொண்டு வந்த பிறகு காப்பாற்ற வேறு யார் இருக்கிறார்கள்...
யார்...
உன் அப்பா அம்மா...
அப்பா அம்மா உயிரோடு இருக்கிறார்களா... அவர்கள் அந்த கப்பல் விபத்தில் இறந்து விட்டதாக நான் படித்தேனே...
அப்படி தான் இத்தனை நாள் நினைத்தோம். ஆனால் அவர்கள் அந்த பெர்முடா