முக்கோணத்தில் உள்ள ஒரு தீவில் உயிரோடு இருப்பதாக பிரதாபன் கண்டு பிடித்து இருக்கிறான். இப்போது அவர்களை பார்க்க தான் கார்த்திக் ராகவ்வாக அவர்களோடு சென்று இருக்கிறான்.
அவனை ஏன் தனியாக அனுப்பினிர்கள். நான் அவனோடு சென்று இருக்க வேண்டும். தவறு நடந்து விட்டது. நான் இப்போது அங்கு செல்ல வேண்டும். ஏதாவது ஏற்பாடு செய்யுங்கள் என்று குயிலி கத்த இல்லைமா... உங்களை பத்திரமாக பார்த்துக் கொள்ள சொல்லி தான் கார்த்திக் எங்களை இங்கு இருக்க சொல்லி இருக்கிறான். அவனுக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என்று கடவுளை வேண்டி கொள்வோம் என்று சொல்ல குயிலியோ செய்வதறியாது திகைத்து அப்படியே அமர்ந்து விட்டாள்.
பெர்முடா முக்கோணம்.....
அதிர்ச்சி... பேரதிர்ச்சி தான். ஆனால் நடுங்க செய்யும் அதிர்ச்சி அல்ல... மனம் மகிழ செய்யும் இன்ப அதிர்ச்சி...
ஆம்... நீந்தலாம் என்று குதித்த ராகவ் மிதக்க ஆரம்பித்தான். எப்படி நான் மிதக்கிறேன் என்று ராகவ் ஆச்சரியமாக கேட்ட அடுத்த நொடி பிரசாத் உள்ளே குதித்தார். அவரும் மிதப்பதை பார்த்த பிரதாபனும் உள்ளே இறங்க அவனும் மிதக்க ஆரம்பித்தான்.
எப்படி இது சாத்தியம் என்று பிரதாபன் வாயை பிளக்க சாக்கடல் என அழைக்கப்படும் Dead Sea பற்றி கேள்வி பட்டு இருக்கியா பிரதாபா என்றார் பிரசாத்.
எஸ்... பட் மறந்து விட்டது.. இப்போ ஏன் அதை கேட்கறிங்க
ஏனென்றால் இதுவும் ஒருவகை சாக்கடல் தான்... அதாவது பூமியிலே கடல் மட்டத்துக்குக் கீழே 417 மீட்டர் ஆழத்தில் உள்ள மிகத் தாழ்ந்த பகுதி தான் மரணக் கடல்.
இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே, ஒரு ஏரி போல விரிந்திருக்கிறது இந்த மரணக் கடல். இந்த கடலில், உயிரினங்கள் வாழ முடியாது என்பதால், இது சாக்கடல் அல்லது இறந்த கடல் என அழைக்கப்படுகிறது. இந்தக் குட்டிக் கடலை, சாக்கடல் என அழைக்கிறார்களே தவிர, இந்தக் கடலில் விழுந்து யாராலும் சாக முடியாது.
மனிதர்களை மிதக்க வைப்பது மட்டுமின்றி, நோய்களை குணப்படுத்தும் சக்தி, இந்த கடல் நீருக்கு உண்டு. இயற்கையான கிருமிநாசினியான உப்பு கலந்திருப்பதால் இந்தக் கடலின் அடியில் படிந்துள்ள சேறுகளை அள்ளி, சந்தனம் போலப் பூசிக் கொண்டு, சுற்றுலா பயணிகள் குளிக்கிறார்கள். இப்போது நாம கூட இந்த மண்ணை பூசிட்டு குளிப்போமா என்று பிரசாத் சொல்ல வேகமாக மறுத்தான் ராகவ்.
ஹலோ சார்... நீங்க சொல்ற தகவல் சாக்கடல் பற்றியது. ஆனால் நாம இப்போ ஒன்னும் சாக்கடலில் இல்லை. சொல்லப்போனால் இது எந்த பக்கம் இருக்கு என்று கூட நமக்கு