தொடர்கதை - ஒன்று சேர்ந்த அன்பு மாறுமோ????? - 02 - கோமதி சிதம்பரம்
பார்வதி அம்மாள் ஜோசியரின் பதிலுக்காக காத்து கொண்டு இருந்தார்.
பொன்னிக்கும் ஆதிக்கும் திருமண பொருத்தம் பார்ப்பதில் அவர்க்கு எள்ளளவும் விருப்பம் இல்லை.
ஆனால், அவரது அத்தை பேச்சியம்மாளின் வார்த்தைகளை மதிக்காமல் இருக்கவும் முடியாது.
அகிலாவை மனதில் வைத்து கொண்டு முடிந்த அளவு ஆதியின் திருமணத்தை தள்ளி போடத்தான் செய்தார். என்றேனும் அவள் திரும்பி வரமாட்டாளா????? என்று இந்த நொடிகூட நினைத்து கொண்டு தான் இருக்கிறார்.
ஆனால், ஆதி அவரது அப்பாத்தாவின் பேச்சுக்கு சம்மதம் தெரிவித்த பின் பார்வதி அம்மாவாள் ஏதும் செய்ய முடியாமல் போய்விட்டது.
இப்பொழுதும் ஆதி தனது திருமணத்திற்கு மனதளவில் ஒப்புக்கொள்ள வில்லை என்பது அவர்க்கு புரியாதான் செய்தது.
அதனால் தான் கோயில் வரை தன்னுடன் வந்தவன் ஜோசியம் பார்க்கும் இடத்திற்கு வர மனமின்றி அவனது தாயை இறக்கி விட்டு வெளியில் காத்து கொண்டு இருந்தான்.
பார்வதியும் ஆதியின் மனநிலை உணர்ந்து கடைசியாக ஒரு முறை இந்த திருமணம் வேண்டாம் என்று கூறி பார்த்தார்..... ஆனால், ஆதியோ தனது திருமணம் சீக்கிரம் நடைபெற்று எனது மனைவி அப்பத்தா கூறியபடியே குலதெய்வ பூஜை செய்ய வேண்டும் என்று தீர்க்கமாக கூறிவிட்டான்.
இதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்று உணர்ந்தவர் கடவுளின் மீது பாரத்தை போட்டு ஜோசியரிடம் பொன்னி மற்றும் ஆதியின் ஜாதகத்தை பொருத்தம் பார்க்க தந்தார்.
ஜோசியர் ஏதோதோ கணக்குளை ஜாதக கட்டங்களை வைத்து போட்டு கொண்டுருந்தார். ஒருவழியாக கணக்குளை முடித்தவர். நிமிர்ந்து பார்வதி அம்மாளிடம் ஆதி மற்றும் பொன்னியின் ஜாதகத்தை திருப்பி கொடுத்தார்.
மன்னிக்கவும்.... இந்த இரண்டு ஜாதகமும் பொருந்தவில்லை.... ஆதியுடன் இந்த பெண்ணிற்கு திருமணம் செய்ய இயலாது என்று வருத்தத்துடன் கூறினார்.
ஜோசியரின் பதிலால் பார்வதி அம்மாளுக்கு மகிழ்ச்சியே.... எந்த வித வருத்தமும் அவர் அடையவில்லை. ஆனாலும், ஜோசியர் ஏதோ சொல்ல தயங்குவது போல பார்வதி அம்மாளுக்கு தோன்றியது.
ஜோசியரேயே .... மறுபடியும் பேச தொடங்கினர். பார்வதி அம்மா.... என்னை தப்பா எடுத்துக்காதீங்க.... இனி ஆதிக்கு பொண்ணு தேடுறதை இதோட நிறுத்திக்கோங்க..... அவனோட ஜாதகப்படி இந்நேரம் அவனுக்கு ஒரு குழந்தை இருக்க வேண்டும். ஆதி, இப்ப அப்பா