கொண்டிருந்தான்.
வாங்க அண்ணா எப்படி இருக்கீங்க...
நான் நல்லா இருக்கேன் மா என்ன விசாரணை எல்லாம் பலமா இருக்கும் போலயே என்று வாசலில் நின்று கொண்டிருந்த இருவரையும் பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்தான்.
அனிதா அவனை கொலைவெறியோடு பார்க்க...ஸ்வேதா பாவமாக பார்த்தாள்.
உடனே ஓடிச்சென்று ஸ்வேதாவை தூக்கியவன் ஸ்வேதாகுட்டி எதுவும் பண்ணியிருக்க மாட்டாளே...
ஆமா அடோ (அசோக் ஷார்ட் ஃபார்மாம்) இவடா அச்சகிரீம் சாட்டா....
எனக்கு தெரியும் ஸ்வேதா குட்டி இவதான் உன்ன கூட்டிட்டு போனாலா....
அந்த பட்டு ஆமா என்பது போல் க்யூட் - ஆக தலையாட்டியது.
அவன் அவள் செய்கையை கண்டு கண்ணத்தில் முத்தமிட்டு கொஞ்சினான்.
அண்ணா இந்த ரெண்டு பேத்தையும் நம்பாதீங்க, அனிதாவாவுது நம்பிடலாம் இந்த குட்டி சொர்ணாக்க நம்பாதிங்க கிரிமினல்.
என்னம்மா குழந்தை போய் இப்படி சொல்ற...
ஆமாமா குழந்தை.....
நீ பேசாத அனிதா.....
மொழி.......
அண்ணா நீங்களே இந்த கூத்தைக் கேளுங்க.... தினமும் ஸ்கூல் விட்டதும் ரெண்டு பேரும் ஆட்டம் போட்டுட்டு இப்படித்தான் லேட்டா வருதுங்க..
மணிய பாருங்க ஏழாச்சு. ஸ்கூல் நாலு மணிக்கு விட்டுரும் 3 மணி நேரம் இப்படி வெளியே திரிஞ்சா என்ன அர்த்தம்.
ஏய் ஸ்டாப்... ஸ்டாப் ..அது எப்படி மூணு மணி நேரமா??? இங்கே இருந்து ஸ்கூல் போறதுக்கு அரைமணி நேரம் வரதுக்கு ஒரு அரை மணி நேரம். இதிலேயே ஒரு மணி நேரம் போய்டுது. இதுல இந்த குட்டி பிசாசு - க்கு பிஸ்டாச்சியோ ஃபிளேவர் (ஐஸ்கிரீம் வகை) தான் வேணுமா.... இந்த ஃபிளேவர்-காக கடை கடையா அலைய வச்சிடுச்சி. இதுல அந்தக் கடைக்காரன் அரைமணி நேரம் கழிச்சி ஆடி அசஞ்சி எடுத்துட்டு வரான். இதுல கிடைச்சது ஒரு மணி நேரம் தான். அதுவும் அஞ்சு ஃபிளேவர் தான் சாப்பிட முடிஞ்சது என்று அவள் ஆவேசமாகப் பேச...
கேட்டுக்கொண்டிருந்த மூவரும் அவளை தீயாய் முறைத்தனர். ஆம் ஸ்வேதா குட்டியும் தான் இடுப்பில் கைவைத்து வெட்டவா குத்தவா என்பது போல் பார்த்து வைத்தாள். பின்ன இவர்களுடைய ரகசியத்தை அல்லவா உடைத்து விட்டாள்.