அதை கொஞ்ச கூட காதுல வாங்காம அந்த டெஸ்ட் ரிப்போர்ட் இருக்கா, இந்த டெஸ்ட் ரிப்போர்ட் இருக்கான்னு கேட்டுட்டு இருக்காங்க... இத்தனை பெரிய ஹாஸ்பிடல்ல கொரோனா டெஸ்ட் எடுக்க கூடவா வசதி இல்லாம வச்சிருப்பாங்க...”
“ஹ்ம்ம் இல்லை ராபர்ட்... இங்க வர்ற ஆளுங்க எல்லாம் பெரிய பணக்காரங்க... கொரோனா பேஷண்ட்ஸ் இருக்காங்க அப்படின்னா அவங்க வர யோசிப்பாங்க... அதுதான் ஒரு சில இடங்கள் தவிர நிறைய தனியார் மருத்துவமனைகள்ல இந்த டெஸ்ட் பண்றதில்லை...”
“ராபர்ட் சார், பேசாம அரசாங்க மருத்துவமனைக்கே போயிடலாமே... பணமும் அதிகம் இருக்காது... அதே சமயம் டெஸ்ட் பண்ற வசதியும் இருக்குமே....”, லக்ஷ்மி கவலையுடன் கூறினாள்...
“இங்க இருந்து அங்க போக குறைந்தது இன்னும் ஒரு மணி நேரத்துக்கும் மேல ஆகும் லக்ஷ்மி... உடனடியா சிகிச்சையும் ஆரம்பிக்க மாட்டாங்க... அங்கேயும் ஏகப்பட்ட ப்ரோசீஜர் இருக்கு....”
“இல்லை மாமா, என்கிட்டே இப்போதைக்கு ரெண்டாயிரம் ரூபாய்தான் இருக்கு... அதை வச்சுண்டு அப்பாவை இந்த ஆஸ்பத்திரிலலாம் சேர்த்துப்பாளான்னே தெரியலை... மேல்கொண்டு பணத்தை ஏற்பாடு பண்ணவும் டைம் வேணும்...”
“பணத்தை பத்தி யோசிக்காத... இப்போதைக்கு நாங்க தர்றோம்... “, சோமசுந்தரம் கூற லக்ஷ்மி தலையசைத்தாள்....
அடுத்த பத்து நிமிடத்தில் அந்த மருத்துவமனையை அடைய, ரங்கனை அவசர சிகிச்சை பிரிவுக்கு அழைத்து சென்றார்கள்...
“என்னாச்சு சார்....”
“வீட்டுல உட்கார்ந்துட்டே இருந்தவர் மயங்கிட்டார் சார்....”, ராபர்ட் இறங்கி ரிசப்ஷனில் கூற,
“சார் மொதல்ல பேஷன்ட்க்கு கொரோனா டெஸ்ட் எடுக்கணும்... அந்த ரிசல்ட் இருவது நிமிஷத்துல வந்துடும்... அதும் பிறகுதான் மத்த டெஸ்ட் ஆரம்பிப்பாங்க...”, ரிசப்ஷனில் கூற, ரங்கன் உள் அழைத்து செல்லப்பட்டார்...
அவர்கள் உள் அழைத்து செல்லும்போதே பலமாக இரண்டு முறை மூச்சை இழுத்து விட்ட ரங்கனின் உயிர் பிரிந்தது....
சாந்திக்கு நேரம் ஆக ஆக வலியும் அதிகரிக்க ஆரம்பித்தது... கூடவே பயமும்... விழுந்ததில் கால் வேறு பிசகியதில் வீங்க ஆரம்பிக்க வலியும் அதிகரித்தது.... ஏற்கனவே ஒரு குழந்தையை இழந்திருந்ததால் இந்த குழந்தைக்கு எதுவும் ஆகவிடக்கூடாது என்ற வைராக்கியத்துடன் அத்தனை உபாதைகளையும் பொறுத்துக்கொண்டு தன் அன்னைக்கும், கணவருக்கும் மறுபடி மறுபடி முயன்றபடியே இருந்தாள்.... இவளின் போதாத நேரம் அவளின்