(Reading time: 7 - 14 minutes)
Ullam kollai poguthe
Ullam kollai poguthe

காட்டி கொள்ளவில்லை.

ஜனனயின் மனதிலும் ஒரு நிம்மதி பரவி இருந்தது. இயல்பாக ஆபிஸ் போக வீட்டு வேலைகளை கவனிக்க என்று இருந்தாள்.

ஆனால் அவள் மனதிலோ இது புயலுக்கு முந்தைய அமைதியா... இல்லை பிந்தைய அமைதியா என்ற எண்ணம் மட்டும் அவ்வப்போது வந்து போனது..

அவள் ஆழ்மனமோ இனி எந்த புயலும் வாழ்வில் வேண்டாம்.. அதை தாங்கும் சக்தியை இழந்து விட்டேன் என்று கடவுளை வேண்டி கொண்டாள்.

திடீரென ஒரு நாள் ஒரு புது நம்பரில் இருந்து அழைப்பு வர யாராக இருக்கும் என்ற யோசனையில் எடுத்தாள்.

எதிர் முனையில் பேசியது அன்று கோவிலில் பார்த்த அதே பெண்மணி...

தான் யார் என்பதை அறிமுகம் செய்து கொண்ட பெண்மணி தன் மருமகளுக்கு அன்று அழைத்ததை வைத்து நம்பர் எடுத்தேன் என்றாள்.

ஜனனி எதுவும் பேசாமல் ம்ம்ம் கொட்ட அன்றைக்கு ஏதோ ஒரு வேகத்தில் உன் முதலாளி பற்றிய விஷயத்தை சொல்லி விட்டேன். தயவு செய்து நீ யாரிடமும் சொல்லி விடாதே என்றாள்.

ஜனனி மறுபடியும் ம்ம்ம் கொட்ட இப்போ கூட அந்த பய அந்த பொண்ணை கூட்டிட்டு தான் டெல்லி பக்கமா எங்கயோ சுத்துறானாம்... பாவம் அவனை நம்பி இப்போ கட்டியிருக்கிறவள் தான்.. சரிமா... அவரவர் வாழ்க்கை அவரவர் கையில்... நாம என்ன செய்ய... அந்த கடவுள் பார்த்து கொள்வார்.. நீயும் நான் சொன்னதை யார்கிட்டேயும் சொல்லாத என்று சொல்லி விட்டு வைத்து விட்டாள்.

குழப்பிய குட்டை போல எதுவும் தெரியாமல் மீண்டும் கலங்கிய சூழ்நிலையில் ஜனனி முதன் முறையாக யோசிக்க தொடங்கினாள்.

யோசிக்க வேண்டிய தருணம் இது என்பதை உணர்ந்தவள் கோபம் விருப்பு வெறுப்பு எல்லாவற்றையும் தூர தள்ளி விட்டு அமைதியாக ஆழமாக யோசிக்க ஆரம்பித்தாள்.

விடை கிடைக்குமா???

தொடரும்

Next episode will be published as soon as the writer shares her episode.

Go to Ullam kollai poguthe story main page

10 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.