உணவுகள், பரிசுகள்,புத்தககங்கள், கவிதைகள், பிடித்த மனிதர்கள் என பலவற்றையும் பேசித் தூக்கம் தொலைத்தனர். என்கிட்ட பேசிக்கொண்டே இரு ரம்யா! உன் குரலை கேட்டுட்டே இருக்கணும் போல இருக்கு என்றவன் ஒரு கட்டத்தில் தூங்கிவிட, மெல்ல ரிசீவரை வைத்து விட்டு, அவளும் சென்று படுத்தாள்.
கடைசித் தேர்வும் முடிந்தது. ஒரு மாதம் விடுமுறை. என்ன திட்டம் என ரம்யா கேட்க, “முதலில் அண்ணன் கூட சென்னைக்குப் போய்த் தங்கலாம்னு நினைச்சேன். ஆனால் அங்கே போயிட்டா உன்கூட பேச முடியாது! அதனால் இங்கே தான் இருப்பேன்!”
உன்னோட பிளான் என்ன ரம்யா? என்றவனிடம், எனக்கொரு பிளானும் இல்ல. ஆனால் உன்னைப் பார்க்காமல் இந்த ஒரு மாசம் எப்படித் தான் போகப்போகுதோ! மலைத்தவளிடம்,
உனக்கு என்னைப் பார்க்கணும்னு தோணுச்சுனா போன் பண்ணு. உன் முன்னாடி வந்து நிக்கிறேன்.
எங்கே என் வீட்டுலையா?
ஆமா !
என்ன ஆமா, எங்க அம்மா, அப்பா வாங்க மருமகனேன்னு உன்னை வரவேற்பாங்க பாரு.
அப்படித்தான் ஒரு நாள் வரவேற்பாங்க என்றான் அவனுக்கே உரித்தான புன்னகையுடன் .
நீ கொடுத்த லெட்டரை எவ்வளவு தடவை வாசிச்சிட்டேன் தெரியுமா? அது ஒண்ணே இந்த லீவ் முழுவதுக்கும் போதுமெனக்கு.
எனக்கொண்ணும் நீ அப்படித் தரலியே.
எனக்கு உன்னை மாதிரி எழுத வராது, பேச வராது, நமக்கு ஒத்து வராத ஏரியா. நீ எழுது நான் வாசிக்கிறேன். நீ பேசு நான் கேட்டுகிறேன். ரெண்டு பேரும் வேற வேற மாதிரி இருந்தால் தான் ஒத்து வரும். ஒண்ணு போல இருந்தால் நல்லா இருக்காது. ஒண்ணே ஒன்னு தோணுச்சு! சொல்லட்டுமா! ஒரு வேளை நீயும் நானும் ஒரே ஹாஸ்பிட்டல்ல பக்கத்துக்கு பக்கத்துக்கு பெட்ல பொறந்த குழந்தைகளா இருந்து உனக்கு நான் எனக்கு நீன்னு முடிவு செஞ்சுருப்போம்னு!
ஹே! நீ எனக்கு மேல யோசிக்கிறடா!
ஆனால் எங்க அம்மாகிட்ட கேட்டேன், நீ எங்கடா ஹாஸ்பிட்டல்ல பொறந்த, அங்கே போறதுக்குள்ள வீட்டுலேயே பொறந்துட்டன்னு சொல்லிட்டாங்க.
சிரித்தாள் ரம்யா. அப்புறம் உனக்கும் எனக்கும் மூணு மாசம் வயசு வித்தியாசம் இருக்கே. என்னோட பாட்டி என்கிட்டே சொல்வாங்க, “எங்கோ மலையிலோ எங்கேயோ ஏதோ ஒரு காட்டிலோ இருக்கிற எலுமிச்சை மரத்தில் காய்க்கிற எலுமிச்சையும், ஏதோ கடலில் இருக்கிற உப்பும் சேர்ந்து ஊறுகாய் வர்றது கூட கடவுள் நினைச்ச மாதிரி தான் நடக்குமாம்.! வாழ்க்கையில் கணவன் மனைவியா முடிச்சுப் போடுறதும் அந்த கடவுள் நினைச்ச மாதிரி தான்