கிளம்புவற்கு ரெடி செய்தாள். அசோக்கும் இவர்களுடன் இணைந்துக் கொண்டான். அனைவரும் ரெடியாக இருந்தனர் கார்த்திக்கின் வருகைக்காக.......
கார்த்திக்கும் ரெடியாகி தேன்மொழி வீட்டை அடைந்தான் அனைவரையும் அழைத்துக்கொண்டு திரும்பவும் மருத்துவமனை நோக்கி வண்டி சென்றது.
கார்த்திக் அனிதா கண் முழிச்சிட்டாளா......
இல்ல அசோக் இன்னும் 2 ஹவர்ஸ் ஆகும்னு டாக்டர் சொன்னாரு.
ஓ..... ஓகே...
அம்மா, அப்பா இவர்தான் அனிதா வேலை செய்ற கம்பெனியோட ஒனர்.
அப்புடியா அசோக். ரொம்ப நன்றி தம்பி. நீங்க தான் அனிதாவ ஹாஸ்பெட்டல் சேர்த்ததா அசோக் சொன்னா......உங்க பேரு என்ன தம்பி.
இப்பொழுது ஷாக் ஆவது தேன்மொழியின் முறையானது.
தேன்மொழி எதோ வாய் திறந்து பேசும்முன் அசோக் அவள் கையை பிடித்து கண் ஜாடை செய்தான்.
எம்பெரு கார்த்திக் அங்கிள். உங்க மாப்பிள்ளையும் நானும் ஃபிரெண்டு தான்.
ஓ அப்ப ரொம்ப நல்லதா போச்சு தம்பி.
ம்ம்... அங்கிள். ஹாஸ்பிடல்ல உங்க மாப்பிள்ளையும் அவங்க அம்மாவும் தான் இருக்காங்க. அங்கிள் நீங்க பயப்படாதீங்க. அனிதா நல்லபடியா தான் இருக்காங்க.
சரி தம்பி. கல்யாண பேச்சு எடுத்தவுடனே என்னடா இது அபசகுணமா ஆக்சிடென்ட் ஆயிடுச்சுனு நினைச்சேன். ஆனா மாப்பிள்ளையோட குணத்தை காட்டுறதுக்கு தான் இது நடந்துருக்கு போல,
தேன்மொழிக்கு தலைசுற்றியது என்னடா இங்க நடக்குது என்று அவள் கண்கள் ஆயிரம் கேள்வி கேட்க... .....அசோக் தான் அவள் கையை பிடித்து பிறகு பேசுவதாக கூறினான்.அவளும் இவர்கள் பேசுவதை அமைதியாக கேட்டுக் கொண்டு வந்தாள். அப்பப்ப கார்த்திக்கை முறைக்கவும் மறக்கவில்லை.
என்னடா வேதாளம் திரும்பவும் முருங்கமரம் ஏறுது...... இந்த அசோக் எதையும் சொல்லல போலயே....
ஒரு வழியாக அனைவரும் மருத்துவமனை அடைந்தனர். அங்கு அபிராமியையும் கதிரையும் கண்டவர்கள் நிம்மதியுடன் அவர்களிடம் நலம் விசாரித்து கொண்டிருக்க.....
டாக்டர் அனிதா கண்விழித்து விட்டதாக கூற, அனைவரும் உள்ளே சென்று விட்டனர். அங்கிருந்த நர்ஸ் இவ்வளவு பேர் இங்க வரக்கூடாது. ஒவ்வொருத்தரா வாங்க என்று கூற, அந்த நர்ஸை அப்படி இப்படி என்று பேசி அசோக் தான் சம்மதம் வாங்கினான்.