அசோக் அவளிடம் பேசப் போக..... அசோக் கையை கார்த்திக் பிடித்து தான் பார்த்துக் கொள்வதாக சொல்லி அவனை அமர வைத்தான்.
மொழியிடம் சென்ற கார்த்திக்,
தேன்மொழி ஏன் இவ்ளோ டென்ஷன் வாங்க ஒரு காபி சாப்பிடுங்க எல்லாம் சரியாயிடும் நாங்க இருக்கோம்ல.....
தேன்மொழி அவன் புறம் திரும்பி ஒரு முறை முறைக்க.......
ப்பா...... பாத்துடி பத்திக்க போறேன். என்று மனதில் கூறி கொண்டவன்.ப்ளீஸ் தேன்மொழி நான் உங்ககிட்ட அனிதா இருக்குற இடத்தை சொல்லாதது தான உங்க கோபம். வாங்க நான் ஏன் சொல்லனு சொல்றேன்.
அவள் அப்பொழுதும் அவன் புறம் திரும்பாமல் இருக்க,பொறுமை இழந்தவன் அவள் கையை பிடித்து இழுத்துக்கொண்டு சென்று விட்டான்.
கார்த்திக் கையை பிடித்ததும் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு தேன்மொழியை ஆட்கொண்டது. அவளும் ஏதும் கூறாமல் அவன் இழுத்த இழுப்புக்கு அவன் கூடவே சென்றாள்.
இவர்கள் போன ஐந்து நிமிடத்தில் டாக்டர் வெளியே வர, இப்பொழுதும் கதிரே முன் சென்று என்ன டாக்டர் என்னாச்சு என்று கேட்க,
அவர் சிறு புன்னகையுடன் கூல் கதிர் பயப்படுறதுக்கு ஒன்னுமில்லை. அவங்ககிட்ட மூவ்மெண்ட் நல்லாவே தெரியுது. நாளைக்குள்ள கண்ணு முழிச்சுரு வாங்க. ஆனா நீங்க யாரும் அவங்க கூட இருக்க முடியாது. மார்னிங் வாங்க ஃப்ரெஷ் ஆகி என்று டாக்டர் சென்று விட்டார்.
கதிர் ஒரு நீண்ட பெரும் நிம்மதி மூச்சு விட்டவனாய் இருக்கையில் அப்படியே சாய்ந்து கண்களை மூடிக் கொண்டான்.
அசோக்கிற்கும் இப்பொழுதுதான் மனமே அமைதி அடைந்தது.கதிரின் நிலையை கண்டவன் இரக்கமுற்றவனாய் அவன் அருகில் சென்று அவன் தோளை தொட்டான்.
அசோக் தொட்டதும் கண்ணை திறந்தவன் அமைதியாக இருக்க.....
உங்களுக்கு என்ன தெரியுமா தெரியாதா எனக்கு தெரியாது. ஆனால் உங்கள எனக்கு நல்லாவே தெரியும் கதிர்.
கதிர் அசோக் புறம் திரும்பினான்.
ஆமா கதிர் நானும் நீ படிச்ச காலேஜ்ல தான் படிச்சேன். உன் டிபார்ட்மென்ட் தான் ஜூனியர். உனக்கு ஒன்னு தெரியுமா கதிர் அனிதாவும் நம்ம காலேஜ் தான். அவ உன்னை