கார்த்திக் தேன்மொழியை காரில் அழைத்துச் செல்லும் பொழுது இருவருக்கும் மௌனமே ஆட்சிமொழியாக இருந்தது. அவன் பேசாமல் இருந்தது ஏனோ தேன்மொழியை எதுவோ செய்தது. பின்னர் அவள் வீட்டில் இறக்கி விட்டவன். அவள் இறங்கும் பொழுது அவள் முகத்தைப் பார்த்து அவன் மனது வலிக்க....
தேன்மொழி.....
அவன் பேச மாட்டானா என்று ஏங்கியவளுக்கு அவன் அவள் பெயரைக் கூறியதும் மிகவும் ஆர்வமாக திரும்பினாள்.
அதனை கண்டவன் மனதில் சாரல் வீசியது.
அனிதா அப்பா அம்மாக்கு சொல்லிட்டேன். அவங்க வந்துட்டு இருக்காங்க. விடியிறதுக்குள்ள வந்துருவாங்க அவங்க வந்தோன அவங்கள ரெடி பண்ணி நீங்களும் காலைல ரெடியா இருங்க நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்.
அவள் வேகமாக தலையாட்டினாள்.
அவன் மனதுக்குள் சிரித்து கொண்டான்.
அவள் மனமே இல்லாமல் திரும்பி நடக்க முயலும் போது,
அப்புறம்.....
அவள் திரும்பி அவனை பார்க்க....
அப்புறம் நீங்க கவலை படாமல் தூங்கி ரெஸ்ட் எடுங்க....எல்லாமே நல்லதா நடக்கும்.
அவள் சிறு சிரிப்புடன் தலையசைத்து விடைபெற்றாள்.
அவளிடம் விடைப் பெற்றவன் வீட்டை நோக்கி வண்டியை விட ...... அவனது செல்பேசி சினுங்கியது.
எடுத்துப் பார்த்தவன் அபிம்மா என்று இருக்கவும் உடனே அட்டென்ட் செய்து காதில் வைத்தான்.
காதில் வைத்தவனுக்கு ஏண்டா அட்டன் செய்தோம் என்று புலம்பும் அளவிற்கு அவர் அவனை திட்டி தீர்த்து விட்டார்.
ஏனென்றால் அனிதாவின் அம்மா கால் செய்து அனைத்தையும் அபிராமியிடம் கூறிவிட்டார். அவர்கள் கிளம்பி வருவதையும் தெரிந்து கொண்டவர். அனிதாவின் நிலையை தன்னிடம் கூறாத கார்த்திக் மற்றும் கதிர் மீது அவரது கோபம் சென்றது.
உடனே வீட்டிற்கு கிளம்பி வரும்படி கூறியவர் போனை வைத்தார்.
(பாவம்பா நம்ம கார்த்திக் எல்லா இடத்துக்கும் அலையோ அலைனு அலஞ்சி எல்லாரையும் சமாளிச்சி, தேன்மொழியையும் ஒரு வழிக்கு கொண்டு வந்து சொப்பாடா