மனதளவில் மருகிக் கொண்டிருந்தான்.
திரும்பவும் அசோக் தொடர்ந்தான். இப்படிப்பட்டவள இப்படி படுக்க வச்சிட்டியே கதிர். இதுக்கு நீ காரணமாய் இருக்க கூடாதுனு தான் நானும் நினைக்கிறேன். ஆனா நீதான் காரணம்னு என் உள் மனசு சொல்லுது கதிர் அது பொய்யில்லை தான..... இந்த விஷயத்தை அனிதா எப்பவும் உன்கிட்ட சொல்லக் கூடாதுன்னு என்கிட்ட சத்தியம் வாங்கியிருந்தா.....ஆனா அனிதா இப்ப பொழச்சுட்டா...... திரும்பவும் நீ அவளை காயப்படுத்த கூடாது என்பதற்காக தான் இந்த உண்மையை உன்கிட்ட நான் சொன்னேன். அவளோட ஒரு நண்பனா உன்கிட்ட ஒரு உதவி கேட்கிறேன். அவளை நீ நேசிகாட்டி கூட பரவால்ல தயவு செஞ்சு காயப்படுத்திறாத..... ஃப்ளீஸ் என கூறிவிட்டு அசோக் சென்று விட்டான்.
அங்கு தேன்மொழியிடம் கார்த்திக் ஏன் அனிதா இருந்த இடத்தை கூறவில்லை என்பதை விளக்கமாகக் கூறினான். அவன் அத்தனை பேசியும் இவள் மௌனமாகவே இருந்தாள். அதற்கு மேல் அவளிடம் பேச விரும்பாதவன். அவளை அழைத்து கொண்டு வந்துவிட்டான்.
இங்கு கதிர் மட்டும் இருப்பதை பார்த்து கார்த்திக் அவனிடம் விசாரிக்க முதல் முறையாக வாயை திறந்து டாக்டர் கூறியதை கூறினான். கார்த்திக்கும் தேன்மொழிக்கும் டென்ஷன் குறைந்து மனதில் நிம்மதி பரவிற்று.
சரி மச்சி வாடா காலையில வருவோம் என்று கதிரை கூப்பிட....
இல்லடா நீ போ நான் காலைல அவளை பார்த்துட்டு வரேன் என்று கதிர் கூறிவிட்டான் முடிவாக,
சரி என்று தேன்மொழி பக்கம் திரும்பியவன். அசோக் போய்ட்டான் என்கூட தான் வரணும் வரீங்களா இல்லையா..... என்று முதன்முறையாக தேன்மொழியிடம் கோபமாக பேசினான்.
அவனிடம் அப்படி ஒரு செய்கையை எதிர்பார்க்காதவள் அமைதியாக அவனுடன் சென்றாள்.
கார்த்திக் மனதில் சிரித்துக்கொண்டான். உன் கிட்ட கெஞ்சினா எல்லாம் வேலைக்கு ஆகாது போலயே இப்புடி மெரட்டி தான் வழிக்கு கொண்டு வரணுமோ.... பார்த்துக்குறேன் என்று மனதில் சூளுரைத்துக் கொண்டு அவளை கூட்டி கொண்டு சென்று விட்டான்.
. கதிர் மட்டும் தனியாக அமர்ந்திருந்தான் அவன் மனம் முழுக்க துக்கம் நிரம்பி வழிந்தது. அசோக் கூறியது அனைத்தையும் நினைத்துப் பார்த்தவனது மனது கல்லாக இருகிற்று. தன்னை உயிருக்குயிராக நேசித்த அவளின் அன்பை கூட உணர முடியாத ஜென்மமாக இருந்து விட்டேனே என்று மனதளவில் நொறுங்கி தான் போனான். இரவு முழுவதும் இதனை நினைத்து நினைத்து அழுது தீர்த்தவன் ஒரு முடிவுடன் விடியலை நோக்கினான்.