கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வரலாம்னு போனவன. இதோ இந்தம்மா இப்ப புடிச்சிக்கிட்டாங்க😂😂)
அபிராமி வீட்டிற்கு சென்றதும் அபிராமி கிளம்பி ரெடியாக இருந்தார். தன்னை மருத்துவமனையில் இறக்கிவிட்டு போகுமாறு கூற.....
அபி மா அங்க ஆல்ரெடி உங்க பிள்ளை இருக்கான். இந்த நைட் டைம்ல நீங்க ஏன் அலைஞ்சுட்டு இருக்கீங்க.
டேய் என் மருமகள இப்புடி ரெண்டு பேரும் ஆக்கி வச்சிட்டு பேசுவிங்கடா..... இதுவும் பேசுவிங்க இதுக்கு மேலயும் பேசவிங்க.....
அபிமா நா இப்ப என்ன பேசிட்டேன்.
நீ வாய மூடிட்டு வண்டி எடு.
சொன்னா கேக்க மாட்டீங்களா டாக்டரே காலைல வந்து பார்க்க சொல்லிட்டாங்க. உங்க புள்ள தான் கேட்காமல் உட்கார்ந்திருக்கானா நீங்களும் அடம் பிடிக்காதீங்க..
அவர் அவனை முறைக்க....அமைதியாக வண்டியை இயக்கினான்.
போகும் வழியெல்லாம் அவனை காய்ச்சி எடுத்துவிட்டார். எப்படி ஆச்சு என்று அவர் பலமுறை கேட்டும் தனக்கு தெரியாது என்பதை மட்டுமே கூறினான்.
மருத்துவமனை வாசலில் இறங்கியவர். விறுவிறுவென்று முன்னே நடக்க அவர் பின்னே கார்த்திக்கும் சென்றான். அனிதா இருக்கும் ஐ சி யு வார்டை இருவரும் அடைய,
அங்கு கதிர் தன் இரு கைகளையும் தலையில் வைத்து குனிந்தபடி அமர்ந்திருந்தான்.
அவனை திட்டுவதற்காக வந்தவர் அவன் நிலையை கண்டு அமைதியாகிவிட்டார். அவன் அருகில் சென்று தலையை தொட,
தன் அன்னையை அந்த நேரத்தில் கண்டவன் ஆறுதல் கிடைக்கப் பெற்றவனாய் அவரை கட்டியணைத்து கண்ணீர் வடித்தான்.
அவன் நிலையைக் கண்டவர் அவனுக்கு ஆறுதல் தரும் பொருட்டு முதுகை நீவி ஆறுதல் படுத்தினார்.
இவர்களின் செய்கை பார்த்த கார்த்திக்கிற்கும் கண்ணில் நீர் கோர்த்து விட்டது. தன்னை கட்டுப்படுத்தியவன் இருவருக்கும் துணையாக அங்கேயே தங்கி விட்டான்.
அன்றைய இரவு அனைவருக்கும் தூங்கா இரவாகி போனது அனைவரும் விடியலை நோக்கி காத்திருந்தனர்.
அவர்கள் எதிர்பார்த்த விடியலும் அழகாக விடிந்தது. அனிதாவின் பெற்றோரை அசோக் தான் பேருந்து நிலையத்திலிருந்து தேன்மொழி வீட்டிற்கு அழைத்து வந்தான். வந்தவர்களை தேன்மொழி தான் கவலை இல்லாமல் தேற்றி அவர்களை சாப்பிட வைத்து மருத்துவமனைக்கு