என்னால எல்லாருக்கும் கஷ்டம்ல.....
ச்சி..... என்ன கஷ்டம். நீ உயிரோட வந்ததே எங்களுக்கு போதும் எங்க எல்லாத்தையும் இப்புடி பயம்புருத்திட்டியே டி ....
அவள் சிறு சிரிப்புடன் அங்கிருந்த நடுத்தர வயது பெண்மணியை யாரென்பது போல் பார்த்தாள்.
அவள் பார்வையை புரிந்துக் கொண்ட அவள் அம்மா.....
அது யாருனு பார்க்குறியா அனிதா..... அதுதான் உன் மாமியார் பக்கத்துல இருக்குறதுதான் மாப்ள......
அனிதா கண்கள் இரண்டும் சாஸரை போல் விரிய அதிர்ச்சியாக அம்மா அப்பாவை பார்க்க..... அவர்கள் சிரித்துக் கொண்டே, உன்கிட்ட கல்யாண சேதி சொல்ல கால் பண்ணப்ப தான். அம்மா நேர்ல போய் சொல்லிக்கலாம்னு சொல்லிட்டாடா.....
ஓ.......
அபிராமி அவளை பார்த்து சிரிப்புடன் இப்ப உடம்பு பரவாலயமா...
பரவால ஆன்டி....
எப்புடி ஆக்சிடென்ட் ஆச்சிமா..... இங்க கேட்டா யாருமே சொல்லமாட்டுறாங்க.....
அவள் கதிரை நோக்க ......
அவன் ஐந்து விரல்களை மடக்கி கண்ணை மூடி திறந்தான்.
அபிராமியை பார்த்து சிரித்தவள். ஒன்னுமில்ல ஆன்டி ஆபிஸ் லீவ் போட்ருந்தேன். போர் அடிச்சதுனு ஷாப்பிங் போனே. அங்க எதிர்பாராத நேரத்துல இப்புடி ஆச்சு ஆண்டி.
அப்புடியாமா..... சரி இனிமே கவனமா இருடா.....
சரிங்க ஆண்டி.
என்ன மாப்ள அமைதியா இருக்காரு. நேத்துல இருந்து அனிதா கூடவே இருந்து பார்த்துகிட்டாராம். அனிதா மேல எவ்ளோ அன்பு இருக்கனும். கட்டிக்க போறதுக்கு முன்னாடியே இப்புடி பார்த்துக்கிறாருனா..... கல்யாணத்துக்கு அப்புறம் சொல்லவா வேணும் என்று அனிதாவின் அப்பா கூற ....
சரி சரி சின்ன சிறுசுங்க எதுனா பேச ஆசப்படும் நாம வெளிய போகலாம் வாங்க..... எல்லாரும்.
அனைவரும் வெளியே சென்றவுடன் கதிர் அனிதாவை பார்த்துக் கொண்டே அருகில் வர, அவளும் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் பார்வையை உணர்ந்தவன் தைரியம் வர பெற்றவனாய் அவள் கையை