Page 17 of 19
என்று சற்று தள்ளி நின்றிருந்த தன் தந்தையை பார்த்து முறைத்தான்.
அவரோ எப்படியோ தான் நினைத்த படி இந்த கல்யாணத்தை நல்லபடியாக நடத்தி முடித்துவிட்ட வெற்றி களிப்பில் தன் மீசையை நீவி விட்டுக் கொண்டவர் தன் மகனின் பார்வையை கண்டு கொண்டு
“பொண்ணு எப்படி? “ என்று ஜாடையால் கேட்க அவனுக்கோ விட்டால் அவரை அடித்து துவம்சம் செய்து விடும் ஆவேசம் வந்தது. ... சந்திரசேகர் தானாக வந்து அவரிடம் பொண்ணு கேட்கவும் முதலில் பையன் பெரிய இடம் என்றுதான் யோசித்தார் கோபால்.
பெரிய இடம் என்றாலும் அவர் நண்பன் சந்திரசேகர் ரத்தம் தானே அவன் உடம்பிலும் ஓடும்.
This story is now available on Chillzee KiMo.
...