அவன் நகர்ந்ததும் தனக்குள் புன்னகைத்துக் கொண்டாள் கல்பனா.
“பயல் ஏகமாய் வழியறான்!...கூடிய சீக்கிரத்தில் ஒரு நல்ல நாள் பார்த்து என் கிட்ட வந்து “ஐ லவ் யூ” சொல்லப் போறான்!...ம்ம்ம்...ஆள் கொஞ்சம் அம்சமாகத்தான் இருக்கான்!...ஆனா பேய்...அதுஇதுன்னு ஆராய்ச்சி பண்ணிட்டிருக்கான்...இவனை மடக்கணும்னா நானும் பேய் வேஷம்தான் போடணும்!...ஓ.கே.எதுக்கும் யோசிக்கலாம்!”
தனக்குள் பேசிக் கொண்ட அந்தக் கல்பனாவிற்கு எப்படித் தெரியும்...அவன் அல்பாயுசுக்காரன் என்பது.
****
அன்று மாலை தன் காதலி ராதிகாவை வழக்கமான ஷாப்பிங் மாலில் சந்தித்த முகிலன் தான் சேர்ந்துள்ள வேலை குறித்த விபரங்களை அவளிடம் கூறினான்.
“என்னப்பா...கடைசில செக்யூரிட்டி வேலைதான் அமைஞ்சுதா உங்களுக்கு?” ராதிகா அவனைக் கேலியாய்ப் பார்க்க
“ஏய்...ஆக்சுவலா நான் இந்த வேலையில் சேர்ந்தது அதுல வரப் போற சம்பளத்துக்காக இல்லை!...அங்க...வேலை செய்யப் போற இடத்துல கிடைக்கப் போற த்ரில்லுக்காகத்தான்!...அட்வென்ச்சர்களுக்காகத்தான்!” பீடிகை போட்டு நிறுத்தினான் முகிலன்.
“க்கும்...என்னப்பா திரில் இருக்கப் போகுது செக்யூரிட்டி வேலைலே?”
“ம்...பேய் இருக்கு”
“எ...எ...ங்கே?”
“நான் செக்யூரிட்டியா ஜாய்ன் பண்ற பில்டிங்லே!” சந்தோஷமாய்ச் சொன்னான் முகிலன்.
“அய்யய்யோ...என்னப்பா இப்படியொரு குண்டைத் தூக்கிப் போடுறே?”
அவனை நெருங்கி அமர்ந்து அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு கேட்டாள்.
யெஸ் ராதிகா!...அந்தக் காம்ப்ளக்ஸ்ல...” என்று ஆரம்பித்து இது வரை அங்கு நடந்தேறிய அமானுஷ்ய சம்பவங்களை வரிசையாய்ச் சொன்னான் முகிலன்.
“வேண்டாம் சாமீ..நீங்க அந்த வேலைக்குப் போகவே வேண்டாம்!” அவனது உள்ளங்கைகளை எடுத்து தன் இரு கன்னங்களிலும் வைத்துக் கொண்டு சொன்னாள்.
“என்ன ராதிகா பயமா?”
“ம்ம்ம்...யோசிச்சுப் பார்த்தா...அப்படித்தான் போலிருக்கு!”
“அட என்ன ராதிகா...நான் இந்த வேலைய ஒரு வேலையா ஏத்துக்கலை!...ஒரு அசைன்மெண்டாகத்தான் ஏத்துக்கறேன்!...கண்டுபிடிக்கப் போறேன்!...அங்கிருக்கற