அமானுஷ்யங்களைக் கண்டுபிடிக்கப் போறேன்!...அதுவும் உன்னோட உதவியோட...” என்றான் கண்ணடித்தபடி.
“என்னது...என்னோட உதவியா?...கடவுளே...நானும் உன் கூட அங்கெல்லாம் வர வேண்டியிருக்குமா?”” கேட்கும் போதே அவள் குரல் நடுங்கியது.
“நாட் நெசஸரி!...நான் மட்டும்தான் போறேன்...என்னோட தொப்பியில் ஒரு விசேஷ காமிரா இருக்கு...அது அங்க நடப்பவைகளையெல்லாம் அப்படியே கிரகிச்சு என்னோட வீட்டுக் கம்ப்யூட்டர்ல “லைவ்”வா காட்டும்!...நீ அங்க...அந்தக் கம்ப்யூட்டர் முன்னாடி இருக்கப் போறே!...ஓ.கே.தானே?”
“சரி...அங்க இருந்திட்டு என்ன பண்ணப் போறேன்?”
“இதுக்கு முன்னாடி செத்துப் போனாங்களே செக்யூரிட்டிக?...அவங்களுக்கெல்லாம் என்ன விபரீதம் நடந்திச்சு?...யாரு அதையெல்லாம் நடத்தினாங்க?...எப்படி அவங்கெல்லாம் செத்துப் போனாங்க?...எதுவுமே சுத்தமா புரியலை!...எப்படிப் புரியும்?...அவங்க வந்து சொன்னாத்தான் புரியும்...தெரியும்...ஆனா அவங்க யாருமே உசுரோட இல்லையே!....அதனால இங்க ஆளாளுக்கு இஷ்டத்துக்கு எதியெதையோ சொல்லிட்டுத் திரியறாங்க!...இப்ப நான் செக்யூரிட்டியா போகும் போது நிச்சயம் அவங்களுக்கு நடந்ததெல்லாம் எனக்கும் நடக்கும்!...அப்ப அதெல்லாமே உனக்கும் கம்ப்யூட்டர் மானிட்டர்ல தெரியும்!...அதே மாதிரி...இந்தக் காமிராவும் ஒரே நேர் வியூல மட்டும் காட்டற காமிரா இல்லை!...அவ்வப்போது அதுவே நாலாப்பக்கமும் சுழன்று எனக்கு முன்னாடி...பின்னாடி எது வந்தாலும் அது மானிட்டர்ல உனக்குத் தெரியற மாதிரி காட்டும்”
“அடப்பாவி...உனக்கும் அதே மாதிரி விபரீதங்கள் நடந்து நீ சாகறதை நான் பார்த்து ரசிக்கவா...என்னையும் கூட்டு சேர்த்திருக்கே?” பொய்யாய்க் கோபித்தாள் ராதிகா.
“நோ ராதிகா!...எனக்கு என்ன விபரீதம் நேர்ந்தாலும் அதிலிருந்து என்னைக் காப்பாற்றிக் கொள்ள என்னென்ன செய்யணுமோ அதையெல்லாம் செஞ்சிட்டுத்தான் நான் இதில் இறங்கறேன்!..ஸோ...அதைப் பத்தி நீ கவலைப் படவே வேண்டியதில்லை”
“என்ன செஞ்சிருக்கே?...இன்ஸ்யூரன்ஸ் பண்ணி வெச்சிருக்கே...அதானே?” தமாஷாய்க் கேட்பது போல் சீரியஸாய்க் கேட்டாள் ராதிகா.
மெல்ல முறுவலித்த முகிலன் தன் முதுகில் அமர்ந்திருந்த பேக்கை முன் புறம் கொண்டு வந்து அதிலிருந்த அந்த சமாச்சாரத்தை எடுத்து வெளியில் காட்ட
ஆடிப் போனாள் ராதிகா.
“பள..பள”வென மின்னியது புத்தம் புது பிஸ்டல்.
“அடப்பாவி...இதை எப்ப வாங்கினே?”