“நான் வாங்கலை ராதிகா...ஏ.சி.தீனதயாள் சார் வாங்கிக் குடுத்தார்...தற்காப்புக்காக மட்டும் பயன்படுத்திக்கச் சொல்லித் தந்தார்!”
“டேய் கோமாளி...நான் பல இங்கிலீஷ் படத்துல பார்த்திருக்கேன்...பேய்களையெல்லாம் துப்பாக்கியால சுட்டா அதுகளுக்கு ஒண்ணுமே ஆகாது!”
“அது படத்துல...ஆனா நிஜத்துல அப்படியில்லை...அதுக கருகிப் போயிடும்!” என்றான் முகிலன்.
“ம்ஹூம்...நீ என்ன சொன்னாலும்..எனக்கென்னவோ பயமாய்த்தான் இருக்கு!”
“ஹேய்...இதெல்லாம் ஒரு அட்வென்ச்சர்டி!...ஒண்ணு சொல்லட்டா?...உனக்கு மட்டும் இந்த மானிட்டர் முன்னாடி உட்கார வேண்டிய வேலை இல்லேன்னா..உன்னையும் என் கூடக் கூட்டிட்டுப் போய்...அந்தப் பேய்க முன்னாடியே உன்னுடன் சரசமாடி....சல்லாபித்து அதுகளுக்கும் மூடு கிரியேட் பண்ணி விடுவேன்!...என்னால எக்கச்சக்கமா மூடு வந்திடுச்சுன்னா...பேய்க வந்த வேலையை விட்டுட்டு மோகினிப் பிசாசுகளைத் தேடி ஓடிடும்க!” சொல்லி விட்டு அவன் சிரிக்க
ராதிகாவும் அவன் நகைச்சுவையைத் தாங்க முடியாமல் வாய் விட்டுச் சிரித்து விட்டாள். பிறகு மெல்லக் கேட்டாள்
“ஆமாம்...எனக்குத் தெரிஞ்சு இந்தக் காலத்துல இளைஞர்கள் ஒண்ணு...மியூஸிக் பைத்தியமா இருக்காங்க...மியூஸிக் காஸெட்...சி.டி.ன்னு அலையா அலைவாங்க!...ஒரு சில இளைஞர்கள் பைக் பித்தர்களா இருப்பாங்க...வித விதமான வெளிநாட்டு பைக்குகளை நெட்ல பார்த்துப் பார்த்து மாய்வாங்க!...சில இளைஞர்கள் டான்ஸ்ல...சில இளைஞர்கள் இலக்கியத்துல...ஆனா...நீ மட்டும் எப்படி...இந்தப் பேய் அட்வென்ச்சர்க்கு அடிமை ஆனே?”
சில விநாடிகள் அமைதியாய் யோசித்த முகிலன்
“இப்ப நான் பிளாஸ்பேக் போகப் போறேன்...டண்ட்டட டய்ய்ங்க்....அப்ப...1995...நான் எட்டாம் வகுப்பு படிச்சிட்டிருந்தேன்!...அப்ப ஒரு நாள்...” வாயாலே ம்யூஸிக் போட்டு தன் முகத்துக்கு எதிரே விரலால் வளையங்களைப் போட்டான்!.
“போதும்...போதும்...ரொம்ப பிலிம் காட்டாதே விஷயத்தைச் சொல்லு!”
சொல்ல ஆரம்பித்தான்.
தொடரும்...
Next episode will be published on 16th Mar. This series is updated weekly on Tuesdays.