தொடர்கதை - எம் மதமும் சம்மதம் – 03 - விஜேஜி
ஒரு மாதத்தில் அஜயையும், அவன் நண்பர்களையும் ஜாஃபா், ஸ்கூலில் சேர்த்து விட்டார், அந்த ஒரு மாதத்தில் அவனைப் பற்றி
மற்ற இசையமைப்பாளர்களுக்கும் விஷயம் பரவியது, எல்லோரும் ஜாஃபரை அனுகினா், அவன் சின்ன பையன் என்று தானே அவனுக்கு கார்டியனாக இருந்து அவனுக்கு எல்லா புக்கிங்கையும் அவரே பார்த்துக் கொண்டார்.
"அஜய், நீ நல்லா விவரம் தெரிந்த பையனா இருக்க, அதனால சொலறேன், உனக்கு நல்ல சான்ஸ் கிடைக்கச்ச உபயோகிச்சுக்க, நிறைய டைரக்டர்ஸ் உன்நை பாட கூப்பிடறாங்க.... நீ பாடினா நல்லா பணம் கிடைக்கும், நீ என்ன சொல்ற?"
" மாஸ்டா், எனக்கு நல்லா படிக்கனும் அவ்வளவு தான் ! நீங்க என்ன சொன்னாலும் கேக்கறேன் "
"நீ நல்லா படி ராஜா, எவ்வளவு வேணுமோ படி, நான் உன்ன படிக்க வைக்கறேன், நான் உனக்கு படிக்க ஏத்த மாதிரி பாடறதுக்கு டைம் போட்டு தறேன், நீ கவலப்படாத நான் பார்த்துக்கறேன்" என்று கூறினார்
ஆறு மாதத்தில் அவனுக்கு நல்ல பெயர் கிடைத்தது , நிறைய பாடல்கள் பாட வாய்ப்பும் கிடைத்தது, பணமும் சேர்ந்தது, நன்றாக படித்தான், கிளாசில் முதல் ராங்க் வாங்கினான், தன்னுடைய நண்பர்களுக்கு புரியாததை எளிதில் புரியும்படி சொல்லிக் கொடுத்தான்
அஜய்க்கு பதிநான்கு வயது, ஏற்கெனவே அவன் பிறந்த நாள் அவருக்கு தெரியுமாகையால், அவனுக்கு சொந்தமாக வீடு வாங்க பார்த்துக் கொண்டிருந்தார், நல்ல அழகான வீடு, அவர் எதிர்பார்த்த மாதிரி எல்லா சௌகாியமும் இருந்தது,
தன் மனைவி நிக்கத்தை அழைத்து கொண்டு போய், அந்த வீட்டை காட்டினார், அவருக்கும் மிகவும் பிடித்தது, உடனே விலை பேசி முடித்து விட்டார், பத்து நாளில் ரெஜிஸ்டா் செய்து கொள்கிறோம் என்று, ஒரு தொகையை முன் பணமாகக்கொடுத்தார்
"என்னங்க யோசிச்சிட்டே வறீங்க ?" என்று நிக்கத், ஜாஃபாிடம் கேட்டார்
" இல்ல நிக்கத், இந்த அஜய் யாரோட மகன், அவன் நம்ம அபு சாயல்ல இருக்கான், என் சாயலும் இருக்கு, ஆனா எனக்கு வேறு எந்த தொடர்பும் கிடையாது, அபு வயசும் இவன் வயசும் பார்த்தா, இவன் பொறக்கச்சே அபூ சின்ன பையன் , அப்ப அவனையும் சந்தேகிக்க முடியல, அப்ப யாரோட பையன் இவன் ஒன்னுமே புரியலை"
" இத பாருங்க, ஏதோ ஒரு காரணம் இவன அல்லாஹ் நம்ம கண்ணுல காட்ருக்காக, அதுக்கு ஏதோ ஒரு காரணம் இருக்கனும்,
அதே போல நீங்க தேடற கேள்விக்கும் விடை கிடைக்கும் கவலப்படாதீங்க "