" இல்லம்மா, இவன் நம்ம மகன் ஜாடைல ,இருக்கான் , அவன் யாருன்னு
தெரியல்ல அதான் கவல,"
தனம் அன்று மிகவும் வேதனையுடன் வாடியிருந்தாள், அவளின் மேனேஜா் முரளி " என்ன ஆச்சு தனலஷ்மி, கொஞ்ச நாளாவே, ரொம்ப டல்லா இருக்கீங்க?"
“ஒன்னுமில்ல சார்"
“இல்ல ஏதோ இருக்கு, என்னன்னு சொன்னா, என்னால முடிஞ்ச உதவி செய்வேன்."
அவள் கண்களில் கண்ணீர் முட்டி கொண்டு வந்தது, கட்டுபடுத்த எவ்வளவு முயற்சித்தும் முடியவில்லை…
அவள் விஷயத்தை கூறினாள், அதைக் கேட்ட
முரளி ஒரு பெரு மூச்சு விட்டு " எனக்கு ஒரு இரண்டு நாள் டைம் கொடுங்க, அப்படியே அந்த ஃபோட்டோவும் கொடுங்க, நான் விசாரித்து சொல்றேன்.
அடுத்த நாள் முரளி, தன் தெருவில் இருக்கும் ஜான் ஒரு சினிமா மியூசிக் டுரூப்பில் இருப்பவர், அவரை பார்க்க சென்றான்.
"ஜான் சார் இருக்காரா?" என்று வாசலுக்கு வந்த அவர் மனைவியிடம் கேட்டார்,
"இருக்காரு, உள்ள வாங்க, அவரை கூப்பிடறேன்."
வெளியே வந்த ஜான், முரளியைப் பார்த்து " எப்படி இருக்கீங்க முரளி சார், என்ன இவ்வளவு தூரம் அதுவும் என்னை பார்க்க வீட்டுக்கே வந்திருக்கீங்க?"
"ஒரு விஷயம் என் பிரண்டுக்கு ஒரு பிராப்ளம், அதான் உங்க கிட்ட அட்வைஸ் கேக்க வந்தேன்," எனறு விவிஷயத்தை கூறினார், அதை கேட்ட ஜான், “இருங்க நான் விசாரிக்கிறேன்.” என்று தனக்குத் தெரிந்த ஏஜண்ட் சோமுவை ஃபோனில் கூப்பிட்டார். அவரிடம் ," அந்த புது சிங்கர் பேர் அஜய், அவரை எப்படி கான்டாக்ட் செய்ய முடியும்? " என்று கேட்டார்.
சோமுவும், "என்ன விஷயம் ஜான்? அஜயைப் பற்றி கேக்கறீங்க, அவர் பெரிய இடத்து சிபாரிசு சாமி, என்ன விஷயம்?"
" விஷயம் பெரிசா ஒன்னுமில்ல அவங்க சொந்தக்காரங்க யாரோ விசாரிச்சாங்க, அதான் எப்படி அவரை காண்டாக்ட் செய்ய முடியும்னு கேட்டேன் வேறொண்ணுமில்ல, சாமி."
"அப்படியா, சொந்தக்காரங்கன்னா தெரிஞ்சிருக்கனுமே, எதுக்கு உன் மூலமா கேக்கறாங்க, சரி நமக்கென்ன, நீங்க முயூசிக் டைரக்டர் ஜாஃபா் சாரோட மேனஜருக்கு கால் செய்ய சொல்லுங்க அவங்கள. "
"அவர் நம்பர் கொடுங்கண்ணே?" அவர் நம்பரை கொடுத்தார், அதை எழுதிக்கொண்டு "ரொம்ப