நன்றிண்ணே!"என்று கூறி போனை வைத்தார்.
"முரளி இந்தாங்க போன் நம்பா், இது மியூசிக் டைரக்டர் ஜாஃபரோட மேனஜர் நம்பர், நீங்க உங்க பிரண்ட கால் செய்ய சொல்லுங்க," என்றார்
இவ்வளவு எளிதில் வேலை முடியும் என்று முரளி எதிர்பார்க்கவில்லை.
" ரொம்ப தாங்ஸ் சார், நான் இவ்வளவு சீக்கிரம் வேலை முடியுமென்று நினைக்கவில்லை, ரொம்ப தாங்ஸ்!" என்று கூறிவிட்டு , சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனா், ஜானின் மனைவி ஜூஸ் கொடுத்தார், அதைக் குடித்துவிட்டு கிளம்பினார், முரளி .
முரளிக்கு ஒரே சந்தோஷம், உடனேயே தனலஷ்மியை ஃபோனில் கூப்பிட்டு விஷயத்தை கூறினார், அந்த ஃபோன் நம்பரை கொடுத்து, " இந்த நம்பரை காண்டாக்ட் செய்ங்க மேடம்."
" ரொம்ப தாங்ஸ் முரளி ஸார் , இது பெரிய உதவி. நான் வாழ்க்கை முழுக்க இந்த உதவியை மறக்க மாட்டேன் முரளி சார்."
என்று கண்ணீர் சிந்திக் கொண்டே கூறினாள், அவருக்கும் அவள் அழுவது புரிந்தது.
" பரவாயில்லை தனலஷ்மி, நீங்க உடனேயே காண்டாக்ட் செய்யுங்க."
"சரிங்க சார் , நாளைக்கு நான் ஆஃபீஸ் வரல."
"சரி லீவ் எடுத்துக்கங்க, பை"
போனை அனைத்து விட்டு, முரளி கொடுத்த நம்பருக்கு கால் செய்தாள்.
கொஞ்சம் ரிங்குக்கு பிறகு மறு முனையில் ஃபோன் எடுத்தார்கள் " ஹலோ!"
"ஹலோ! என் பேர் தனலஷ்மி, ஜாஃபா் சார் கிட்ட பேசனும் அவர் இருக்காரா?"
" என்ன விஷயம் மேடம், அவர் பிசியா இருக்காரு."
"இது அவர் கிட்ட தான் பேசனும், ரொம்ப முககியம்."
“அப்படியா! அவர் கிட்ட கேட்டுதான் சொல்லனும். "
"நீங்க அவர் கிட்ட ஃபோன கொடுங்க, அவா்கிட்டயே பேசறேன், இது ரொம்ப முக்கியமான விஷயங்க."
"சாி கொஞ்சம் இருங்க, நான் சார் கிட்டே கேட்டு சொல்றேன்"
"சாிங்க, ரொம்ப நன்றிங்க!"
அவன் கதவைத் தட்டினான் " வா!" என்றார் ஜாஃபா்
“சார் யாரோ ஒரு மேடம் உங்களோடு பா்சனலா பேசனுமாம் , ஃபோன கொடுக்கவா?"
"என்ன விஷயமாம்?"
“தெரியல சார் ,ரொம்ப முக்கியமான விஷயம் போலிருக்கு.”
" சரி கொடு!"
அவனிடமிருந்து ஃபோனை வாங்கி "ஹலோ நான் ஜாஃபா் பேசறேன், நீங்க யார்