பேருக்கும் மனசில பாசம் ஜாஸ்தி...! அம்மா சஹானாவை கோபத்தில் திட்டிட்டு அப்புறம் ரொம்ப ஃபீல் செய்து வருத்தப் படுவாங்க... சஹானாவும் அதே போல் தான்...”
“ம்ம்ம்...”
“எங்க அம்மாவை பத்தி யாரு ஒரு வார்த்தை சொன்னாலும் திட்டி தீர்த்திடுவா...!!!! இப்போவும் அத்தை எங்க வீட்டுக்கு வந்தால் சஹானாவை பத்தி தேவை இல்லாதது பேசாமல் இருக்க மாட்டாங்க... மாமா எங்களுக்கு செய்திருக்கும் ஹெல்ப் ப்ளஸ் இன்னும் நாங்க எங்க வீட்டிற்கு தர வேண்டி இருக்கும் பாக்கின்னு எல்லாம் பத்தி நினைத்து, அவங்களை எதுவும் சொல்லவும் முடியாது...!!! ஸோ, முடிந்த அளவில் அத்தை வரும் போது சஹானாவை வீட்டில் இல்லாமல் பார்த்துக் கொள்வது ரொம்ப வருஷமாகவே செய்வது தான்... படபடப்பா பேசினாலும் சுஹா மனசு ரொம்ப சாஃப்ட் தீபக்... வெளியே காட்டிக் கொள்ளாவிட்டாலும், இப்போதும் அத்தையோட பேச்சு அவளை ரொம்பவே பாதிக்க தான் செய்யுது... ஆனால், அதே மாதிரி அம்மா எப்போதாவது கோபமா சொன்னாங்கன்னு வைங்க, அவளிடம் ஒரு ரியாக்ஷனும் இருக்காது! சில சமயம் அவங்க இரண்டு பேர் நடுவே இருக்க அன்டர்ஸ்டான்டிங் பார்த்து எனக்கே கொஞ்சம் பொறாமையா தான் இருக்கும்...”
“இப்போ புரியுது அவங்களுக்கு ஏன் நான் விளையாட்டுக்கு உங்க அம்மா பத்தி சொன்ன உடனே அவ்வளவு கோபம் வந்ததுன்னு... சாரி...”
“சாரி எல்லாம் எதுக்கு, பரவாயில்லைங்க தீபக்...! சில விஷயங்கள் அப்படி தான்... கண்ணில் தெரிவதற்கும், உண்மைக்கும் நிறைய டிஸ்டன்ஸ் இருக்கும்...”
“வெரி ட்ரூ சாதனா.... உங்க ஃபேமிலியோட அறிமுகம் கிடைத்தது எனக்கு ரொம்ப ரெஃப்ரெஷிங்கா இருக்கு... நீங்க எல்லோரும் அமேசிங் பீபிள்...”
“ஏன் நீங்க அமேசிங் பெர்சன் இல்லையா என்ன? தப்பை உணர்ந்து தண்டனையை ஏத்துக்கிட்டு மூணு வருஷமா அமைதியா இருக்கீங்களே! எத்தனை பேர் அப்படி இருப்பாங்க? உங்க அப்பா, அம்மா மேல உங்களுக்கு இருக்கும் அன்பும் அலாதி தான் தீபக்!”
Ivanga rendu peroda fb is saddening...anyway Saha is out of it and waiting to see her in action to releive Deepak from Sanghavi
Look forward to read the next update.
Thank you.
Aana sahana um deepak um Epom mingle aaguvanga..
Sadhana nd kishore love cutely expressed.. 😘😘😘
Thanks for more pages..
Waiting for next episode...