வியர்த்தான். “ஒரு வேளை பிரமையோ?”
சில நிமிடங்களுக்குப் பிறகு, நிதானமாய்ப் படுத்து, உறக்கத்திற்கு முயற்சித்துப் பார்த்தான்.
‘ஜல்....ஜல்”
“டக்...டக்”
அதே சப்தம், ஆனால் இந்த முறை அந்த கொலுசு சப்தத்தோடு, இன்னொரு காலடி சப்தமும் கேட்க, ரவீந்தரின் தொண்டை வறண்டது. கண்ணின் கரு விழிகள் இங்குமங்கும் அலை பாய்ந்தன. “அய்யய்யோ...உப்பாயம்மனை வைத்து நான் செய்த ஃப்ராடுகளுக்கு எனக்கு தண்டனை கிடைக்கப் போகுதா?”
“ஜல்...ஜல்”
“டக்...டக்...”
படுக்கையிலிருந்து மெல்ல எழுந்து, கையை நெஞ்சில் வைத்துக் கொண்டு, வீட்டின் பின்புற ஜன்னலைத் திறந்து பார்த்தான். அந்த ஜன்னல் வழியே பார்த்தால் தெரு முழுவதும் தெரியும்.
தெரு விளக்குகள் மங்கலாய் எரிந்து கொண்டிருக்க, இரண்டு உருவங்கள் தெருவின் இடப்புற ஓரத்தில், நிதானமாய் பதுங்கிப் பதுங்கிச் சென்று கொண்டிருந்தன. அந்த உருவங்களின் உடல்வாகுவை கூர்ந்து கவனித்த ரவீந்த்ருக்கு, அதில் ஒன்று ஆண், என்பதும், இன்னொன்று பெண் என்பதும், தெளிவாகப் புரிந்தது.
“யார் இவங்க?...எதுக்கு இந்த நேரத்துல பதுங்கிப் பதுங்கிப் போயிட்டிருகாங்க?...ஒரு வேளை திருட்டு கும்பலாய் இருக்குமோ?...ஆனா...ரெண்டுல உருவத்துல ஒரு உருவம் லேடி மாதிரியல்ல தெரியுது?...இப்ப லேடீஸ் இந்த தொழிலிலும் ஆண்களுக்கு சமமா வந்திட்டாங்களா?” குழப்பமானான்.
மொபைலை எடுத்து டைம் பார்த்தான். 1.45.
“என்ன பண்ணலாம்?” யோசித்தான். திடீரென்று ஒரு முடிவெடுத்தவனாய், சட்டையை அணிந்து கொண்டு, வாசற்கதவைத் திறந்தான். ”அவங்க் பின்னடியே போய் யாரு?..என்ன?ன்னு தெரிஞ்சிட்டே வரலாம்”
சத்தமில்லாமல் கதவைச் சாத்தி விட்டு, தெருவில் இறங்கினான்.
அவர்களுக்குப் பின்னால், இருபதடி இடைவெளி விட்டு ஓசையின்றித் தொடர்ந்தான் ரவீந்தர்.
ஊருக்கு வெளியே இருந்த சின்ன மத்தான் தோட்டத்தை நோக்கி அவர்கள் செல்ல, “ஓ...இன்னிக்கு இந்தப் பண்ணை வீட்டைத் தேட்டை போடப் போறாங்களோ?” நினைத்துக் கொண்டான் ரவீந்தர்.
ஆனால், அவன் எண்ணத்தைப் பொய்ப்பிப்பது போல் அவர்களிருவரும், பண்ணை வீட்டைத்