என் கிட்ட சொல்லவே இல்ல?"
"இல்ல நான்தான் அம்மாகிட்ட பாட்டிய பார்க்கணும்னு சொன்னேன் மாஸ்டர் அதான் திடீர்னு கிளம்பி வந்துட்டோம், எனக்கும் ரொம்ப நாளாவே ஊர்ல நிலம் வாங்கி போடணும்னு ஆசை அதான் இங்க ஊர் பெரியவர் நிலமாம் அதான் மாஸ்டர்,"
"நிலம் வாங்கறதெல்லாம் பெரிய விஷயம் நிறைய பிராட் நடக்கறது, அவர் பேர் என்ன?"
"அவர் பேர் தனுஷ்கோடி ஐயா!"
"தனுஷ்கோடியா, அவரோடவா இருக்கீங்க?"
"ஆமாம் மாஸ்டர்!"
"போன அவர்கிட்ட கொடு!"
போனை எடுத்துக் கொண்டு ஐயாவிடம் கொடுத்தான் "மாஸ்டர் உங்க கிட்ட பேசணுமாம்."
"யாருப்பா மாஸ்டர், என்கிட்ட என்ன பேசணுமா? "என்று கேட்டார் போனை வாங்கிக் கொண்டே,
"ஹல்லோ, யாருங்க?" என்றார் தனுஷ்கோடி .
"ஹல்லோ தனுஷு நான் தான் ஜாஃபர் பேசறேன்."
"அட ஜாபரு, நீ எங்கடா இவங்க போன்ல ?"
"அவங்க எனக்கு ரொம்ப வேண்டியவங்க, தனம் என் மக மாதிரி அவங்க ஆசை படறாங்க, நான் பேசறது உனக்கும் எனக்கும் மட்டும் சரியா, அவங்க என்ன முடியும்னு சொல்றாங்களோ அதுக்கு ஏத்த மாதிரி முன்ன பின்ன பேசி முடி, மிச்சத்தை நாம பேசி நான் செட்டில் பண்ணிடறேன் சரியா?"
"என்னடா இது?"
"ஆமாம் தனுஷ் அவங்க பேசி முடிச்சுட்டு போனவுடனே நீ எனக்கு கால் பண்ணு, நான் டீடைலா பேசறேன் ."
"சரி, என்ன விலை சொல்ற?” ஜாபர் தனுஷ்கோடியை கேட்டார் .
“ ஐஞ்சு கொடுடா, ஐம்பது ஏக்கர் அதோட என் பூர்விக வீட்டையும் கொடுத்துடறேன், என் பசங்க இந்த ஊருக்கு நாங்க எங்க வர போறோம், நீங்க அங்க சொத்தை வச்சு என்ன பண்ண போறீங்க , அதனால வித்துடுங்க அதை பராமரிக்க முடியாது ரொம்ப கஷ்டம்னுட்டாங்க."
"அதாண்டா வித்துடறேன், எங்களுக்கும் வயசாகிட்டே போகுது, என்ன பண்ணப் போறேன், உங்களை மாதிரி நல்லவர்களுக்கு கொடுத்தா சந்தோஷம்டா. சரி நான் இவங்ககிட்ட பேசறேன், சரிடா உன்னோட பிறகு பேசறேன் ."
ஃபோனை அஜய்கிட்டேயே கொடுத்தார் தனுஷ்கோடி , அதை வாங்கி கொண்ட அஜய், "சொல்லுங்க மாஸ்டர், எவ்வளவு பாலன்ஸ் இருக்கு? அவர் ஐஞ்சு கோடி சொல்றார்."