"நீ போனை தனத்துக்கிட்ட கொடு!" என்றார், ஜாஃபர். அவனும் போனை தனத்திடம் கொடுத்தான் .
தனம் போனை வாங்கி கொண்டு "சொல்லுங்க அங்கிள் ?"
"அம்மா தனம், அவர்கிட்ட எப்படியும் ரெண்டு கோடி வரைதான் என்னால முடியும்னு சொல்லு, நானும் அவர்கிட்ட சொல்லியிருக்கேன், உங்களுக்கு எவ்வளவு முடியும்னு, அவர்தான் சொன்னாரே நல்லவர்களுக்கு கொடுத்தா சந்தோஷம்னு, அதனால பேசிப் பாரு, உனக்கு ஏதாவது பிராப்ளம்னா, நானே பேசி முடிக்கறேன். நீங்க போய் நிலத்தையும் வீட்டையும் பார்த்துட்டு எனக்கு சொல்லும்மா நானே பேசறேன்."
"சரிங்க அங்கிள், நானும் அஜயும் இப்பவே போய் பார்க்கறோம் அங்கிள்."
"சரிம்மா, என்கிட்ட சொல்லிட்டு போயிருக்கலாம் இல்ல ?"
"இல்ல அங்கிள் அஜய்த்தான் உடனே கிளம்பலாம் பாட்டியை பார்க்கணும்னான் அதான் உடனே கிளம்பிட்டோம். "
"சரிம்மா, பிறகு போன் பண்ணும்மா , நான் இப்போ வைக்கறேன்."
"சரிங்க அங்கிள்!" என்று போனை ஆஃப் செய்து அஜயிடம் கொடுத்தாள்.
அப்போது கமலம்மா கையில் மாம்பழ ஜூஸ்ஸோடு வந்தார்.
"ஐயா, நாங்க இப்ப நிலத்தை பார்க்கறோம், அப்புறம் ஜாஃபர் அங்கிள் உங்ககிட்ட ரேட் பேசறேன்னாங்க. "
"சரிம்மா, அதான் சரி. அவன்கிட்டயே பேசிக்கறேன்!" என்றார் கமலம்மாவை பார்த்ததும்,
" கமலம் இவங்க நம்ம ஜாஃபருக்கு வேண்டப்பட்டவங்க, ஜாஃபரே என்கிட்ட பேசினான். இவங்க நிலத்தை பார்க்கட்டும் பிறகு நானே உன்கிட்ட ரேட் பேசறேன் முடிச்சிடலாம்னுட்டான்."
"அட ஜாஃபர் அண்ணனை தெரியுமா? சொல்லவேயில்லையே ?"
"உங்களுக்கு ஜாஃபர் அங்கிளை தெரியும்னு எனக்கு தெரியாது அம்மா அதான் சொல்லல, ஐயா பேரை கேட்டவுடன் அங்கிள் தான் அவரோடு பேசறேன்னு போனை வாங்கி பேசினார். அப்பதான் தெரியும் உங்களுக்கு அவரை தெரியும்னு. "
"சரி சரி இப்போ எப்படி வந்திருக்கீங்க, நம்ம கார்லியே போகலாமா? என்று கேட்டார் தனுஷ்கோடி .
"ஆமா ஐயா, எங்க கார் சென்னையிலேயே இருக்கு. "
'ஆமாம், நிக்கத் அண்ணி எப்படியிருக்காங்க?"
'ஆன்டி ரொம்ப நல்லயிருக்காங்க, ரொம்ப நல்லமாதிரி அவங்க, எனக்கு அம்மா மாதிரி."