(Reading time: 60 - 120 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

அஜயை பார்த்தாள்."

"போலாம்மா" என்றான் .

"இது யாரு தனம்?"

"இது... இது என் மகன்!" என்றாள் .

'நீயே சின்ன பொண்ணு உனக்கு இவ்வளவு பெரிய மகனா ? அம்மோடியோவ் ரொம்ப ஒசரமா இருக்கானே?" என்று ஆச்சர்ய பட்டாள்.

"என்ன படிக்கறான்? என்று அவள் கேட்க,

"டாக்டருக்கு படிக்கறான் "என்றாள், தனலஷ்மி..

"உன் மகன் உன் ஜாடையில்லையே, ஆனா ரொம்ப பார்த்தா மாதிரி இருக்கு? இவன் ஜாடைல யாரோ இருக்காங்க ஞாபகம் வரமாட்டேங்குது " என்று குழம்பிக் கொண்டிருந்தாள், சரஸ்வதி .

"சரி நான் கிளம்பறேன், இன்னிக்கே ஊருக்கு போகணும்!" என்றாள் தனம்.

"இங்கதான் என் வீடு வந்துட்டு போ , ஒரு பத்து நிமிஷம் தான்  அந்த திருப்பத்துல தான் வீடு வாயேன். " என்று அவளை கெஞ்சினாள், பாவமாக இருந்தது.

"சரி வா! " என்று பேசிக் கொண்டே நடந்தார்கள், அவள் வீடு ரொம்ப சின்னது, உள்ளே வெளிச்சம் அவ்வளவாக இல்லை .

சரஸ்வதி தன் இரு மகள்களையும் கூப்பிட்டாள், இரண்டு பேரும் ஓடி வந்தார்கள் , இருவருமே சரஸ்வதியின் ஜாடையில் இருந்தார்கள், அவர்களின் உடைகளை  பார்த்ததுமே வருமானம் பத்தவில்லை என்று தெரிந்தது, அவர்களிடம் ஐநூறு ரூபாயை கொடுத்தாள் தனம் " இதெல்லாம் எதுக்கு?" என்று கேட்டாள் அவள் பிரென்ட் சரஸ்வதி.

"குழந்தைகள் ஏதாவது வாங்க்கிக்கட்டும் ." என்று கூறிவிட்டு, இன்னும் ஒரு ஐயாயிரம் எடுத்து அவளிடம் கொடுத்தாள், "ஐயோ இதெல்லாம் வேண்டாம் தனம், நீ ஏன் பணமெல்லாம் கொடுக்கறே?"

"நீ கஷ்டப் படறியே என்னால முடிஞ்சது வச்சுக்கோ!" என்றாள் .

"என்ன நீ என் கஷ்டம் எப்பவும் தீராது, இப்போ நீ கொடுத்துடுவ, இது செலவழிஞ்சதுக்கு அப்புறம் யார் கொடுப்பா?' என்று கேட்டாள் சரஸ்வதி.

"அது கரெக்ட் தான் , நீ ஏதாவது வேலை செய்யறீயா?"

" இந்த சின்ன ஊர்ல எங்க வேலை கிடைக்கும், அப்பப்போ ஏதாவது பணியாரம் பண்ணி விப்பேன், ஆனா இங்க சாப்பிடருத்துக்கே ஒன்னும் காணோம் எங்கேயிருந்து பணியாரம் பண்றது ?"

"சரி நீ ஏன் காய் கறி வாங்கி வீடு வீடா விக்கக் கூடாது? நான் இங்க இருந்தப்போவே நான் வித்து பணம் சேர்த்து, அம்மா செலவுக்கு கொடுத்து மிச்சத்தை என்னோட மேல் படிப்புக்கு

11 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.