"ஆமாம்மா, என்னம்மா யோசனை ? எதை பத்தியும் கவலப் படாதம்மா!" என்று கண்களை மூடி அவளுக்கு ஆறுதல் தெரிவித்தார் நிக்கத்.
அவளுக்கும் புரிந்தது, தான் எதை பற்றி நினைக்கிறாள் என்று புரிந்து தனக்கு ஆறுதல் பார்வையையாலேயே கூறுகிறார்.
என்ன மாதிரி மனுஷி இவர்கள் இப்படியும் சில பேர் இருக்காங்க, எவ்வளவு அழகா புரிந்துக் கொள்கிறார், "தனம்மா எல்லாம் ரெடியா இருக்கா அங்கிள் கேட்டாங்க, பிறகு இன்னிக்கே ஊருக்கு போறோம் இல்லியா?"
"ஆமாம் ஆன்டி! " என்றாள் தனம்.
"ஏன் பாட்டிம்மா இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போலாமே ? இந்த ஊர் நல்லாயிருக்கு , ஏதோ இந்த ஊர் மேல கொஞ்சம் பாசமா இருக்கு , நான் இங்கதான் பொறந்ததாலோ என்னவோ? ' என்று கண் கலங்கினான் அஜய், அதை பார்த்த ஜாபருக்கும் கண்கள் கலங்கியது, அதை பார்த்த நிக்கத் தனம் இரண்டு பேருக்கும் கூட கண்கள் கலங்கின...
"மாஸ்டர் எனக்கு என் அப்பாவை பார்க்கனும்போல இருக்கு மாஸ்டர், இந்த ஊர்ல அவர் வாசனை இருக்கு மாஸ்டர் எனக்கு அவரை பார்கனும்போல இருக்கு மாஸ்டர் , "என்று புலம்பினான், அவன் உடல் குலுங்கிற்று... அவன் யாருக்கும் கேட்காத வகையில் மெதுவாக கூறினான், ஜாபஃரிடம், தனத்தால் அவன் அழுவதை தாங்க முடியவில்லை.
"அஜய்.... அஜய் கண்ணா, என்னப்பா ஆச்சு, என் கண்ணா, என் தங்கம், என் செல்லம், நீ ஏண்டா குலுங்கி குலுங்கி அழற? என்னடா ஆச்சு?" அவசர அவசரமாக கண்ணைத் துடைத்துக் கொண்டான் அஜய், "ஒன்னுமில்லம்மா, ஒண்ணுமில்ல, " என்று அவசரமாக எழுந்து பின் பக்கம் ஓடினான் முகத்தை அலம்ப.
"என்ன ஆச்சு அங்கிள் அவன் எதுக்கு அழுதான், உங்க கிட்ட என்ன சொன்னான் ?"
"ஒண்ணுமில்ல தனம்மா அவனுக்கு…….அவன் இங்க பிறந்த ஞாபகம் வநதுடுத்தும்மா….நீ ஒர்ரீ பண்ணாத!”
இல்ல அங்கிள்அவன் மனசுல வேற ஏதோ ….என் குழந்த… என்றவள் அவனை பார்க்க பின் புறம் சென்றாள்.
ஜாஃபர், எழுந்து வாசலுக்கு சென்றார், தன் காரில் ஏறி பின் புறம் சென்று கர்சீப்பை தலையில் கட்டி கொண்டு கீழே சின்ன விரிப்பை விரித்து நமாஸ் செய்தார், கண்ணில் கண்ணீர் வழிந்தது, 'என் குழந்தைகளை ஏன் இப்படி வருத்தப் பட வைக்கறீங்க அல்லா, அந்த சின்ன குழந்தைக்கும், அந்த பெண்ணை என் மகளாய் நினைக்கிறேன், ஒரு நல்ல வழியை காமிங்க இனி என்ன, அவங்க குடும்பத்தை ஒண்ணா சேர்த்துடுங்க, அந்த சின்ன குழந்தை அவன்